மதுரை, ஜூன் 4- சென்னை ஐ.ஐ.டி ஆசிரியர் நியமனங்களில் 50 விழுக்காடு ஓபிசி, எஸ்சி, எஸ்டி காலியிடங்கள் நிரப்பப்படா மல் உள்ளது. இதுகுறித்து சமூக நீதியில் அக்கறை கொண்ட கல்வியாளர் குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிய கல்வி அமைச்ச ருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து சு வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை ஐ.ஐ.டி நடத்திய ஆசிரியர் இட ஒதுக்கீடு காலியிடங்களுக்கான “இலக்கு இடப்பட்ட சிறப்பு நியமனத் தேர்வு” முடிவுகள் அதிர்ச்சி அளிப்ப தாக உள்ளன. மொத்தம் அறிவிக்கப் பட்ட 49 காலியிடங்களில் 23 இடங் களே நிரப்பப்பட்டு உள்ளன. மீதம் 26 இடங்கள் “யாரும் தகுதி பெற வில்லை” என்ற காரணம் காட்டப்பட்டு நிரப்பப்படவில்லை. நான் தொடர்ந்து மத்திய கல்வி நிறு வனங்களில் ஆசிரியர் இட ஒதுக்கீடு சட்டம் 2019 மீறப்படுவது பற்றி நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்பியும் கடிதங்கள் எழுதியும் வருகிறேன். கடந்த 21.03.2022 அன்று கூட திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் நிலுவைக் காலியிடங்கள் “யாரும் தகுதி பெறவில்லை” “போது மான விண்ணப்பங்கள் வரப் பெற வில்லை” என்ற காரணங்களால் நிரப்பப் படுவதில்லை என்பதை சுட்டிக் காட்டி இருந்தேன். அரசாங்கமோ மத்திய கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி பெற் றவை என்ற வழமையான காரணங் களையே பதிலாக தந்து தலையிட வில்லை. தன்னாட்சி என்றால் இந்திய அரசியல் சாசனத்திற்கும் மேலானவர்களா என்று கூட கேட்டிருந் தேன்.
என்னைப் போன்றவர்களின் குரல் எழுப்பிய நிர்ப்பந்தத்தால் கடந்த செப்டம்பர் 2021 இல் ஓராண்டு காலக் கெடுவோடு அறிவிக்கப்பட்ட ஆசிரியர் இட ஒதுக்கீடு காலியிடங்களுக்கான “இலக்கு இடப்பட்ட சிறப்பு நியமனத் தேர்வுகளிலும்” இதே அநீதி கூடாது என்பதற்கே ஒன்றிய அரசின் கவனத் திற்கு கொண்டு சென்றிருந்தேன். ஆனால் ஒன்றிய அரசின் கை கழு வல், இட ஒதுக்கீடு மீறலுக்கான துணிச் சலை மத்திய கல்வி நிறுவனங்களுக்கு தந்துள்ளது என்றே சென்னை ஐஐடி ஆசிரியர் தேர்வு முடிவுகள் தெரி விக்கின்றன. இந்தியா முழுமையும் நிறைய ஐஐடிகளில் இதே நிலைதான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஹைதராபாத், ரூர்கி ஐஐடி களில் உரிய காலக்கெடுவுக்குள் நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதற்கான முனைப்பு இல்லை என்று அறிகிறேன். தில்லி ஐஐடியில் 12 துறை ஆசிரியர் நியமனங்க ளுக்கு 57 விண்ணப்பங்கள் பட்டியல் சாதியினரிடம் இருந்து வந்தும் ஒருவர் கூட நேர்காணலுக்கு அழைக்கப்பட வில்லை என்றும் அறிய வருகிறேன். இதுகுறித்து ஜூன் 4 அன்று நான் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு கடிதம் எழுதி யுள்ளேன். இலக்கு இடப்பட்ட பணி நியமனங் கள் நடந்தேறி உள்ள விதம் பற்றி சமூக நீதியில் அக்கறை கொண்ட கல்வியாளர் குழு ஒன்று ஆய்வு செய்ய வேண்டும். எவ்வளவு விண்ணப்பங்கள் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் இடமிருந்து ஒவ்வொரு துறை ஆசிரியர் பணி யிடங்களுக்கும் வரப்பட்டது , எவ்வளவு பேர் நேர்காணலுக்கு அழைக்கப் பட்டார்கள், எவ்வளவு பேர் தேர்வு பெற்றார்கள் என்பதை வெளிப்படை யாக அறிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு மத்திய பல்கலைக் கழகத்தில் உள்ள ரோஸ்டர்களை - ஓ. பி.சி, எஸ்சி, எஸ்டி நிலுவை காலியிடங்களின் விவரங்களோடு - பொது வெளியில் மக்கள் அறியும் வண்ணம் வெளியிட வேண்டும். இட ஒதுக்கீடு இடங்களை பொதுப் பட்டியலுக்கு மாற்றுகிற ராம் கோபால் ராவ் அறிக்கையை பிற்காலத்தில் நியாயப்படுத்தவே இப்படி இடங்கள் நிரப்பப்படுவதில்லை என்ற ஐயம் எழுவதால், இலக்கிடப்பட்ட நிய மனங்கள் அடுத்தடுத்து நடத்தப்பட்டு இலக்குகள் எட்டும் வரை தொடர வேண்டும். உதவிப் பேராசிரியர் பணியிடம் மட்டு மின்றி அனைத்து ஆசிரியர் பணியிடங் களிலும் ஒபிசி, எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீடு அமலாவதை உறுதி செய்ய வேண்டும். இராம் கோபால் ராவ் குழு அறிக்கையை எதிர்ப்பின் காரணமாக ஏற்பதாக அறிவிக்காவிட்டாலும் மறை முகமாக அமலாகிறதோ என்ற கேள்வி கள் எழுவதை தவிர்க்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கோரிக்கை விடுத் துள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.