சென்னை, ஜூலை 17- பள்ளி மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்ட போராட்டத்தில் காவல்துறை தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்துவது குற்றவாளி களை பாதுகாக்கவே உதவி செய்யும் என்று இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வீ. மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக நிர்வாகம் தெரிவித்தது.
மாணவியின் மர ணத்தில் சந்தேகம் உள்ளது/ எந்த காரணமு மின்றி எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும் என மாணவியின் பெற்றோர் கேள்வி எழுப்பி, மாணவியின் மரணத்திற்கு நிர்வாகம் தான் காரணம் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர், உறவினர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கம், ஜன நாயக அமைப்புகள் மாணவியின் மரணத் திற்கு நீதி கேட்டு உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என தொடர் போராட்டம் கடந்த மூன்று நாட்க ளாக நடைபெற்று வருகிறது. இந்நிலை யில் ஜூலை 17 ஞாயிறன்று போராட்டத்தின் போது பள்ளியின் மீதும் பேருந்துகள் மீதும் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜனநாயக ரீதியிலான தொடர் போராட்டங்களே நீதியை பெற்றுத் தரும். வன்முறை நம் கோரிக்கை யை மழுங்கடிக்கவே செய்யும். ஆகவே வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவது பொருத்தமல்ல. அதே நேரத்தில் தடியடி மூலமும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் போராட் டங்களை அடக்க நினைப்பது குற்றவாளி களை பாதுகாக்கவே பயன்படும். மர ணத்திற்கு நீதி வழங்காது. ஆகவே அரசு உட னடியாக உரிய விசாரணை நடத்தி மாணவி யின் மரணத்திற்கு காரணமானவர்களை உட னடியாக கைது செய்ய வேண்டும். தனியார் கல்வி நிலையங்களில் தொடரும் மரணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் மாண வர்கள் எவ்வித பயமுமின்றி கல்வியை தொடர அதற்கான சூழலை அரசு உரு வாக்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவி யின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண் டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.