உதகை, மே 10- 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் ஆசிரியர் உதவியுடன் விடை எழுதிய தாக எழுந்த விவகாரத்தில், உதகை யில் முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டி ருந்த 34 மாணவர்கள் தோல்வி அடைந் ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், மஞ்சூரை அடுத்த சாம்ராஜ் அரசு உதவிபெறும் பள்ளியில், கடந்த மார்ச் 27 ஆம் தேதி நடந்த 12 ஆம் வகுப்பு கணித தேர்வில் மாணவர்கள் சிலருக்கு தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் விடை எழுத உதவியதாக புகார் எழுந் தது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி தலை மையிலான அதிகாரிகள், கண் காணிப்பு கேமரா பதிவுகளை கைப் பற்றி விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அறை கண்காணிப் பாளர்களாக பணிபுரிந்த ராம்கி, மூர்த்தி, முதன்மை கண்காணிப் பாளராக பணிபுரிந்த ராதாகிருஷ்ணன், வழித்தட அலுவலர் சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 5 பேர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், சாம்ராஜ் அரசு உதவிபெறும் பள்ளியில் கணித தேர்வு எழுதிய 34 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தாக கூறப்பட்டது. பிறகு, 34 மாணவர் கள் கணித பாடத்தில் தோல்வி அடைந் துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர் கள், பெற்றோர்கள் பள்ளியை முற்று கையிட்டனர். இதனையடுத்து, மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் முனியசாமி, கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி ஆகியோர் தலைமையிலான கல்வித் துறை அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். பிறகு,முதன்மைக் கல்வி அலுவலர் முனியசாமி கூறும்போது, “தேர்வு எழுதிய 34 மாணவர்கள், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர், தற்போதைய தலைமை ஆசிரியர் உட்பட பல்வேறு தரப்பி னரிடம் விசாரணை நடத்தி, அதன் அறிக்கை சென்னையில் உள்ள தேர்வுத் துறைக்கு கொண்டு செல்லப்படும். சர்ச்சைக்குரிய 2 மாணவர்களை தவிர, மற்ற 32 மாணவர்களுக்கு கணித பாடத்தில் மதிப்பெண் வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு நல்ல முடிவு எடுக்கும். எனவே, யாரும் அச்சப்படத் தேவையில்லை”என்றார்.