states

ரஷ்ய விண்வெளி மையத்தை பார்வையிடும் தாம்பரம் மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

சென்னை, ஜூலை 28- ரஷ்ய விண்வெளி மையத்தை பார்வையிட தாம்பரம் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 6 பேர்  தேர்வாகி யுள்ளனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் முடங்கி கிடந்த அரசுப் பள்ளி  மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் விதமாக ‘ராக்கெட் சயின்ஸ்’ என்ற தலைப்பில் ஆன்லைன்  பயிற்சியானது கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்டது. அறிவியலாளர் சிவதாணு பிள்ளை அகத்தியர் விண் வெளி அறிவியல் குழுமம் சார்பில் வார இறுதி நாட்களில் நடத்தப்படும் இந்த பயிற்சியில் 56 அரசுப் பள்ளி களை சேர்ந்த 500 மாணவர்கள் கலந்து  கொண்டனர். இதில் பல்வேறு கட்ட தேர்வுக ளுக்கு பிறகு இறுதியாக தேர்வாகி யுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 75 மாணவர்கள் ரஷ்யாவில் உள்ள யூரிகாகரின் விண்வெளி ஆய்வு  மையத்தை பார்வையிட உள்ளனர். இவர்களில் செங்கல்பட்டு மாவட்டம், ஜமீன் பல்லாவரத்தில் உள்ள  தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படித்த ரோகித், முகமது  சாதிக், ரக்ஷித், லதிஷா, இலக்கியா மற்றும் லிதிகா ஆகிய 6 மாணவர்க ளும் தேர்வாகி அடுத்த மாதம் 9 ஆம் தேதி ரஷ்யா செல்லவுள்ளனர். ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு  மையத்தை பார்வையிட தேர்வாகி யுள்ள 6 மாணவர்களுக்கும் தாம்பரம் மாநகராட்சி பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பல்லா வரம் தொகுதி எம்.எல்.ஏ இ.கருணா நிதி கலந்து கொண்டு ஆறு மாணவர்க ளுக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். முன்னதாக பள்ளி  தரப்பில் தேர்வாகிய 6 மாணவர்கள் இலக்கியா மற்றும் லித்திக்கா ஆகியோருக்கு நிதியுதவி கிடைக்கா மல் இருந்தது. இதை அறிந்த எம்.எல்.ஏ இ.கருணா நிதி தனது சொந்த நிதியிலிருந்து  ரூ.3 லட்சம் காசோலையை வழங்கி னார். அது மட்டுமின்றி நன்கொடை யாளர்களிடமிருந்து மேலும் ஒரு லட்சம்  ரூபாய் பெற்றுக் கொடுத்திருக்கிறார். ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட தமிழ்நாட்டில் 75 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் நிதியுதவி கிடைத்த 50 மாணவர்கள் முதற்கட்டமாக ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரஷ்யா செல்லவுள்ளனர். மற்ற 25 மாணவர்கள் அடுத்தாண்டு மே மாதம் அழைத்துச் செல்லப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.