கள்ளக்குறிச்சி ஆக 19- கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் வாசுதேவனூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி யில் முதலாம் ஆண்டு மாணவன் மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பாக கல்லூரி தாளாளர், முதல்வர் உள்ளிட்டோரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது, இறந்த மாணவனின் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும் என கட்சியின் கள்ளக் குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டத்தைச் சேர்ந்த ஊ.மங்கலம் கிராமத்தில் வசிக்கும் பழனிச்சாமி-அன்பரசி ஆகியோரின் மகன் அபித்குமார் (வயது 19) என்பவர் வாசுதேவனூரில் உள்ள மகாபாரதி பொறியியல் கல்லூரியில் பி.இ. மின்னியல் மற்றும் மின் அணுவியல் (எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்) பொறியியல் படிப்பில் சேர்ந்து முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரி விடுதியில் தங்கி இருந்து பயின்று வந்தவர் கடந்த சுதந்திர தின விடுமுறைக்காக வீட்டிற்கு சென்று விட்டு 17ஆம் தேதி வீட்டில் இருந்து கல்லூரி விடுதிக்குச் சென்ற அவர் 18 ஆம் தேதி காலை அவரது தந்தைக்கு போன் செய்து வகுப்பிற்கு செல்வ தாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் காலை 9.30 மணி அளவில் அபித்குமாரின் வகுப்பு பேராசிரியர் மாரியப்பன் என்பவர் அவரது தந்தை யிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அபித்குமாரை பற்றி அவரது தந்தையிடம் தவறாக கூறியதாகவும், சிறிது நேரம் கழித்து வேறு சில பேராசிரியர்கள் “அபித்குமாரின் அம்மாவை அழைத்துக் கொண்டு உடனடியாக கல்லூரிக்கு வாருங்கள்” என பழனிச்சாமியை போன் செய்து அழைத்துள்ளனர்.
சடலமாக கிடந்த மாணவர்
பழனிச்சாமி ஊரிலிருந்து கிளம்பி கல்லூரிக்கு சென்று பார்த்தபோது அபித்குமார் சடலமாக கிடந்துள்ளார். கல்லூரி நிர்வாகம் மற்றும் துறை ஆசிரியர்களின் துன்புறுத்தலால் அபித்குமார் கொடூரமாக இறந்துள்ள தாக உடன் படிக்கும் மாணவர்கள் கூறி யுள்ளனர். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை கல்லூரி நிர்வாகத்தின் துன்புறுத்தலால் அபித்குமார் மரணம் அடைந்துள்ளதாக கூறி கதறி அழுதுள்ளார்.
சிபிஎம் தலைவர்கள் விரைவு
தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், பி.சுப்பிரமணியன், எம்.கே.பூவராகன், வி.ஏழுமலை, சின்னசேலம் இடைக்குழுச் செயலாளர் டி.மாரி முத்து, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மு.சிவக்குமார், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் வி.சின்னராசு உள்ளிட்டோர் கல்லூரி வளாகத்திற்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு அபித்குமாரின் தாய், தந்தையிடம் நடந்த விபரங்களை கேட்டறிந்தனர். பின்னர் அபித்குமாரின் தந்தையை அழைத்துச் சென்று சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
கள்ளக்குறிச்சி காவல் கண் காணிப்பாளர் மோகன்ராஜ், கூடுதல் கண்காணிப்பாளர் ஜவஹர்லால், துணை கண்காணிப்பாளர் ரமேஷ் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அபித்குமார் தந்தை பேட்டி அபித்குமாரின் தந்தை பழனிச்சாமி நம்மிடம் கூறும்போது “எனது மகன் நல்ல முறையில் தான் வீட்டில் இருந்து புறப்பட்டு கல்லூரிக்கு வந்தான். காலையில் என்னிடம் கூறிவிட்டு வகுப்பறைக்கு சென்றவனை துறைத்தலைவர் மாரியப்பன், கல்லூரி ஆசிரியர்கள் செல்வதுரை, காளி தாஸ், மற்றும் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் சித்ரவதை செய்து அடித்து கொன்றுள்ளனர். எனவே கல்லூரி தாளாளர் உள்ளிட்டு அனை வரையும் கைது செய்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
தொடர்கதையாகும் மாணவர்களின் மர்ம மரணம்
சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் கூறும் போது “தனியார் கல்லூரிகளில் மாணவ, மாணவியரின் மர்ம மரணம் என்பது தொடர் கதையாக உள்ளது. தற்போது இறந்துள்ள மாணவன் அபித்குமா ரின் தந்தை பழனிச்சாமி கடலூர் சிப்காட்டில் தனியார் தொழிற்சாலை யில் பாதுகாவலராக பணிபுரிந்து வரு கிறார். சகோதரி அபியரசி கல்லூரி யில் முதுநிலை படிப்பு (எம்எஸ்சி.பி.எட்) முடித்து ஆசிரியர் கல்வியும் முடித்துள்ளார். முதல் மகன் அசாத்குமார் பொறியியல் படிப்பு முடித்துள்ளார். ஆகவே இவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும், அபித்குமாரின் இறப்பிற்கு நிவாரணமாக ரூபாய் 25 லட்சமும் வழங்கிட வேண்டும் என தமிழக அரசை கட்சியின் கடலூர் மாவட்டச் செய லாளர் மாதவன், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் ஆகியோர் வலியுறுத்தி யுள்ளனர்.