states

வரம்பு மீறும் ஆளுநர் ரவி

சென்னை, அக். 24 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர் வாணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபு வையும், உறுப்பினராக சிவக்குமா ரையும் நியமிக்க வேண்டும் எனும், தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளு நர் ஆர்.என். ரவி நிராகரித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மை யாக கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலை வராக ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந் திரபாபுவை நியமிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்து  ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந் தது.

இதற்கு விளக்கம் கேட்டு ஆளு நர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு உரிய முறையில் பதில் அளித்தும் தமிழ்நாடு ஆளுநர் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நிராகரித்துள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவி, தான் போகும் நிகழ்ச்சிகளில் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை பரப்பி வருவதுடன் ஒரு முழுநேர அர சியல்வாதியாக செயல்பட்டு வரு கிறார். தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க தலைவர்களையும், சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் சிறுமைப் படுத்தி பேசுவதுடன் அவதூறுகளை யும் பொழிந்து வருகிறார்.  தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட 20-க்கும்  மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள் ளார். தமிழ்நாடு அரசின் மக்கள்  நலத் திட்டங்களுக்கும், நடவடிக்கை களுக்கும், பரிந்துரைகளுக்கும் ஒப்புதல் அளிக்காமல் வரம்புகளை மீறி தொடர்ந்து நிராகரித்து வருகிறார்.  அத்தகைய இவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாட்டு மக்களும், ஜனநாயக இயக்கங்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து குரலெழுப்பியும் ஒன்றிய அரசு வேடிக்கை பார்த்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, அரசியல் காழ்ப்புணர்ச்சி யுடன் முழுநேர அரசியல்வாதியாகவும், தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களின் நலன்களுக்கும் விரோதமாக முட்டுக் கட்டையாக செயல்படும் ஆளுநர் ஆர். என். ரவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.