states

மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை கறாராக அமல்படுத்திடுக!

மதுரை, மார்ச் 1- தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப் பின் (சிஐடியு) மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி விடுத்துள்ள அறிக்கையில், ‘‘கடந்த 25.02.2024 அன்று மாலை அக்கரைப்பேட்டை யிலிருந்து ஆத்மநாதன், சிவநேசசெல்வம், காளாத்திநாதன் ஆகிய 3 மீனவர்கள் நாகப்பட்டி னம் துறைமுகத்திற்கு கிழக்கே நாட்டுப் படகில் (பைபர் போட்) மீன்பிடித்துக் கொண்டிருந்த னர். அப்போது நாகை கீச்சாங்குப்பத்தை சார்ந்த விசைப்படகு ஒன்று வலைகளை அறுத்துச் சென்றுள்ளது.  இதனை நாட்டுப்படகு மீனவர்கள் தட்டிக் கேட்டதால் விசைப்படகில் வந்தவர்கள் நாட்டுப்படகு மீது மோதி கவிழ்த்துள்ளனர். அத்துடன் கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் சிவநேசசெல் வம், காளாத்திநாதன் ஆகிய இருவரும் படுகாயம டைந்து கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஆத்மநாதன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். 1983-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முறையாக அமல்படுத்தாததால் விதிமீறல்கள் அதிகரித்து விசைப்படகு மீனவர்களும் நாட்டுப்படகு மீனவர்க ளும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது.  அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை தேவை விதிமீறல்களில் ஈடுபடும் விசைப்படகு உரிமை யாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். உயிரிழந்த மீனவர்களுக்கும், பலத்த காய மடைந்து சிகிச்சையில் உள்ள மீனவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடு பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  மேலும் மோதல் ஏற்படாமல் மீன்பிடித் தொழில் சுமூகமாக நடைபெற மாவட்ட ஆட்சியர் தலைமை யில் சம்பந்தப்பட்ட மீனவர் பகுதியினரை கலந்து கொள்ள வைத்து சுமூகமான உடன்பாடு ஏற்படுத் தப்பட்டு மீன்பிடித் தொழில் எந்தவிதப் பிரச்சனை யும் இல்லாமல் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.