புதுதில்லி, ஜூன் 11- 15 மாநிலங்களில் 57 இடங்களுக்கு நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பி னர் தேர்தலில், பாஜக கூட்டணியைக் காட்டிலும் அதிக இடங்களை எதிர்க்கட்சி கள் கைப்பற்றியுள்ளன. நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பத விக்காலம் விரைவில் முடிவடைவதை யொட்டி, இந்த இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில், உத்தரப் பிரதேசம், தமிழ் நாடு, பீகார், ஆந்திரப் பிரதேசம், மத்தி யப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், பஞ் சாப், தெலுங்கானா, ஜார்க்கண்ட், உத்தர கண்ட் ஆகிய 11 மாநிலங்களில் போட்டி ஏற்படாததால், இங்கு தேர்தல் நடக்காம லேயே 41 மாநிலங்களவை உறுப்பினர் கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, ஹரியானா, ராஜஸ் தான், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய எஞ்சிய 4 மாநிலங்களில் 16 எம்.பி. பதவிகளுக்கு மட்டும் மே 10 அன்று தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்கு எண்ணிக்கை முடிவில், அதிகபட்சமாக பாஜக 8 எம்.பி. பதவிகளையும், காங்கி ரஸ் 5 எம்.பி. பதவிகளையும் கைப்பற்றி யுள்ளன. தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா, பாஜக - ஜேஜேபி ஆதரவு சுயேச்சை தலா ஒரு மாநிலங்களவை உறுப்பினர்களைப் பெற்றுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 4 இடங்களில் ஆளும் பாஜக மூன்று இடங்களைப் பிடித்தது. அந்த கட்சி சார்பில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் சிரோயா ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷூம் மாநி லங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட னர். மதச்சார்பற்ற ஜனதாதளம் வேட்பா ளர் தோற்றுப்போனதுடன், அக்கட்சி யின் எம்எல்ஏ ஸ்ரீநிவாச கவுடா கட்சி மாறி காங்கிரஸூக்கு வாக்களித்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் 4 இடங்க ளுக்கு நடைபெற்ற தேர்தலில் 3 இடங்க ளில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், ஒரு இடத்தில் பாஜகவும் வெற்றி பெற்றன. இங்கு காங்கிரஸ் சார்பில் அதன் மூத்த தலைவர்கள் முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் பிரமோத் திவாரி ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர். பகுஜன் சமாஜ் சின்னத்தில் வெற்றி பெற்ற அக்கட்சியின் 6 எம்எல்ஏ-க்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தனர். இங்கு பாஜக எம்எல்ஏ ஷோபாராணி குஷ்வாஹாவும், கட்சி மாறி காங்கிர ஸூக்கு வாக்களித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதனால் அவரை கட்சி யின் அடிப்படை பொறுப்பில் இருந்து பாஜக நீக்கியுள்ளது. ராஜஸ்தானில், சுபாஷ் சந்திரா என்ற சங்-பரிவார் பேர்வழியை சுயேட்சை வேட்பாளராக நிறுத்தியிருந்தது. எனினும் அவர் தோல்வியடைந்தார்.
மகாராஷ்டிராவில் உள்ள 6 இடங்க ளில் பாஜக 3 இடங்களிலும், ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பில் (காங்கி ரஸ் 1, தேசியவாத காங்கிரஸ் 1, சிவ சேனா 1) 3 பேரும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாஜக சார்பில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், அனில் பாண்டே, தனஞ்சய் மகாதிக் ஆகி யோர் வெற்றி பெற்றனர். சிவசேனா சார்பில் அதன் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தும், காங்கிரஸ் சார்பில் இம்ரான் பிரதாப்காரியும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் பிரபுல் படேலும் மாநிலங்கள வைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மகாராஷ்டிராவில் 6 மாநிலங்க ளவை உறுப்பினர் இடங்களுக்கு 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலை யில், சட்டமன்ற உறுப்பினர்கள் பலத் தின் அடிப்படையில் காங்கிரஸ், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு இடம், பாஜக-விற்கு 2 இடம் கிடைப்பது உறுதியாகி இருந்தது. இவை தவிர 6-ஆவது இடத்திற்கு பாஜக - சிவசேனா ஆகிய 2 கட்சிகளுமே வேட்பா ளர்களை நிறுத்தியிருந்தன. மகாராஷ்டிராவில் ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 42 எம்எல்ஏ-க்கள் தேவை என்ற அடிப்படையில், சிவசேனாவுக்கு 40 எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருந்தது. ஆனால், சிறையில் இருக்கும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவாப் மாலிக், அனில் தேஷ்முக் ஆகி யோருக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்து விட்டதால், அந்த எண்ணிக்கை 38 ஆக குறைந்தது. மேலும், சிவசேனா எம்எல்ஏ சுஹாஷ் காண்டே முறைகேட்டில் ஈடு பட்டதாக அவரது வாக்கு செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், பின்னர் அந்த எண்ணிக்கை 37 ஆனது. இதனிடையே, 29 எம்எல்ஏ-க்களின் ஆதரவை மட்டுமே பெற்றிருந்த பாஜக, சுயேச்சை எம்எல்ஏ-க்கள் 17 பேரை தனக்கு ஆதரவாக வளைத்து, சிவசேனா வுக்கு கிடைக்கவிருந்த ஒரு எம்.பி. பதவியை தட்டிப்பறித்தது.
ஹரியானாவில் பாஜக வேட்பாளர் கிஷன்லால் பன்வார் மற்றும் பாஜக - ஜேஜேபி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மா ஆகி யோர் வெற்றி பெற்றனர். இங்கு காங்கி ரஸ் மூத்த தலைவர் அஜய் மாக்கனுக்கு போதிய வாக்குகள் கிடைக்கவில்லை. ஹரியானாவில் பாஜக வேட்பாளர் கிருஷ்ண லால் பன்வாருக்கு 31 வாக்கு கள், காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மக்கா னுக்கு 29 வாக்குகள், பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மாவுக்கு 28 வாக்குகளும் கிடைத்தன. எனினும், காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மக்கான் தோற்றுப் போனதாக அறி விக்கப்பட்டது. மொத்தமுள்ள 90 எம்எல்ஏக்களில், ஒரு சுயேச்சை வேட்பாளர் வாக்களிக்க வில்லை. ஒரு வாக்கு நிராகரிக்கப்பட் டது. இதன் காரணமாக 88 வாக்குகள் மட்டும்தான் செல்லும் என்றும், இதன டிப்படையில், ஹரியானாவில் வெற்றிக்கு 29.34 வாக்குகள் தேவை என வும் கணக்கிட்ட தேர்தல் ஆணையம், பாஜக வேட்பாளர் பன்வாருக்கு மொத் தம் 31 வாக்குகள் கிடைத்த நிலையில், அதில் 29.34 வாக்குகளுக்கு மேலாக கிடைத்த வாக்குகள், சுயேட்டை வேட்பா ளர் சர்மாவுக்கு மாற்றிவிடப்பட்டதன் அடிப்படையில் மக்கான் தோற்கடிக்கப் பட்டதாக அறிவித்தது. இதன்மூலம் தேர்தல் அறிவிக்கப் பட்டிருந்த ஒட்டுமொத்த 57 இடங்களில் பாஜக 22 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும் வென்றுள்ளன. இந்த இரு கட்சிகள் தவிர, ஒய்.ஆர். காங்கி ரஸ் கட்சி - 4, திமுக - 3, பிஜூ ஜனதா தளம் - 3, அதிமுக - 2, ராஷ்ட்ரிய ஜனதா தளம் - 2, சமாஜ்வாதிக் கட்சி - 2, தெலுங் கானா ராஷ்ட்ரிய சமிதி - 2, ஆம்ஆத்மி - 2, ஐக்கிய ஜனதாதளம் - 1, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - 1, ராஷ்ட்ரிய லோக் தளம் - 1 என மாநிலங்களவைத் தேர்த லில் வெற்றிபெற்றுள்ளன. 3 இடங்க ளில் சுயேச்சைகள் வெற்றிபெற்றுள்ளனர். இதன்மூலம் பாஜக கூட்டணியைக் காட்டிலும் அதிகமான இடங்களில் எதிர்க்கட்சிகளே வெற்றிபெற்றுள்ளன. அதிமுக, ஐக்கிய ஜனதாதளம் மட்டுமே பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.