states

முதுநிலை மருத்துவப் படிப்புகள் கலந்தாய்வு இன்று தொடக்கம்

சென்னை, ஆக.6- முதுநிலை மருத்துவப் படிப்பு களுக்கான மாநில அரசின் கலந்தாய்வு இணையவழியில் திங்கட்கிழமை (ஆக.7) தொடங்குகிறது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்து வப் பட்ட மேற்படிப்புகள் எம்.டி.,  எம்.எஸ்., டிப்ளமோ மற்றும் பல் மருத்து வப் பட்ட மேற்படிப்பு எம்டிஎஸ் படிப்பு களுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்கள் கொண்டு நிரப்பப் பட்டு வருகின்றன.  இந்தத் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது. நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி களின் மொத்த இடங்களில் 50 விழுக்காடு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் இடங்கள் மற்றும் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் இடங்கள் ஆகிய வற்றுக்கு ஒன்றிய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்கு நரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணைய வழியில் கலந்தாய்வு நடக்கிறது.

எம்.டி. எம்.எஸ்., டிப்ளமோ மற்றும் எம்.டி.எஸ். படிப்புகளுக்கான 2023-2024-ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இணைய தளத்தில் கடந்த 27ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 விழுக் காடு இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்துகிறது. எம்.டி., எம்.எஸ்., டிப்ளமோ மற்றும் எம்.டி.எஸ். படிப்புகளுக்கான 2023-2024 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான மாநில கலந்தாய் வுக்கு இணையவழியில் விண்ணப் பிப்பது கடந்த மாதம் 6 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி நிறை வடைந்தது. பரிசீலனைக்குப் பின்னர், எம்.டி., எம்.எஸ்., டிப்ளமோ படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 7,526 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3,036 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. எம்.டி.எஸ்.  படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு 661 விண்ணப்பங்கள், நிர்வாக  ஒதுக்கீட்டு இடங்களுக்கு 336  விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டன. ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், முதுநிலை மருத்து வப் படிப்புகளுக்கான கலந்தாய்வு மக்கள் நல்வாழ்வுத்துறை இணைய தளங்களில் திங்கட்கிழமை தொடங்கவுள்ளது.