கடந்த 2022ம் ஆண்டில் தமிழ் நாட்டில் கல்வித்துறைக்காக மாநில கல்விக் கொள்கை உரு வாக்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமை யில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டது. அந்த குழு மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான அனைத்து பணிகளையும் மேற கொண்டது. கல்வியாளர்கள், ஆசிரி யர் சங்கங்கள், பொதுமக்கள் என பலதரப்பிலும் கருத்து கேட்டுப்பெற் றுள்ளது. அதன் தொடர்ச்சியாக 13 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்த குழுக்களும் கல்வி தொடர்பான பிரச்ச னைகளுக்கு அந்தந்த துறைகளுடன் தொடர்பு கொண்டு தீர்வுக்கான வழி களை ஆய்வு செய்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் வெவ்வேறு வகையான 50 பள்ளிகள், 15 கல்லூரி கள், 5 பல்கலைக் கழகங்களை தேர்வு செய்து அவை எதிர்கொள்ளும் பிரச் சனைகளையும் அதை தீர்ப்பதற்கான வழிகளையும் நேரடியாக ஆய்வு செய்து வருகிறது. இவற்றுடன் சேர்த்து பொதுமக்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களிடம் இருந்து பெறப் பட்ட கருத்துகளையும் இணைத்து மாநில கல்விக் கொள்கை உரு வாக்கப்படுகிறது. பரிந்துரைகள் மீது குழுவின் உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்து களையும் அறிந்து செயல்பட வேண் டிய நிலையில் குழு இருக்கிறது. அத னால், ஆகஸ்ட் 30 ஆம் தேதி மேற் கண்ட குழுவின் கூட்டம் கூட்டப்பட உள்ளது. அப்போது 14 உறுப்பி னர்கள், 13 துணைக்குழுக்கள் ஆகி யோர் தங்கள் கருத்துகளை தெரி வித்து, குழு தயாரித்துள்ள பரிந்துரை கள் மற்றும் அம்சங்கள் மீது ஒப்பு தல் தெரிவிக்க உள்ளனர். அதன் பிறகே மாநிலக் கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட்டு அரசிடம் ஒப்ப டைக்கப்படும்.