அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள்!
இராமேஸ்வரம், நவ. 27 - இலங்கையில் நில வும் பொருளாதார நெருக் கடி காரணமாக, அந்நாட்டின் யாழ்ப்பாணம் பகுதியி லிருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ், படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடி க்கு வந்தனா். இவர்கள், காவல்துறை விசாரணை க்குப் பின், மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஓபிஎஸ்-சுக்கு எதிராக எடப்பாடி ஆட்சேபணை மனு
புதுதில்லி, நவ. 27 - அதிமுக பொதுக்குழு விவகார வழக்கு, செவ்வா யன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என். பாட்டி அமர்வில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் வழக்கை ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் உச்ச நீதி மன்றத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது. ஆனால், விசார ணையை தள்ளி வைக்கும் ஓபிஎஸ்-சின் கோரிக்கையை ஏற்கக்கூடாது என எடப்பாடி தரப்பில் ஆட்சேபணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குக்கி மக்கள் 6 மாநிலங்களில் நாளை போராட்டம்
இம்பால், நவ. 27 - மணிப்பூரில் தங்களுக் கென தனி மாநிலம் அல்லது சுயாட்சி நிர்வாகம் கோரி குக்கி-ஜோ பழங்குடி மக்கள் நவம்பர் 29 அன்று போராட்டம் அறிவித்துள்ள னர். இந்தப் போராட்டம் தமிழ்நாடு, மிசோரம், திரி புரா, தில்லி, கர்நாடகா, மணிப் பூர் ஆகிய 6 மாநிலங்களில் நடைபெறும் என்றும் அவர் கள் தெரிவித்துள்ளனர்.
6-ஆவது முறையாக ‘வந்தே பாரத்’ மீது கல்வீச்சு
புவனேஸ்வர், நவ. 27 - இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதலே ‘வந்தே பாரத்’ ரயிலின் மீது அவ்வப்போது கல் வீச்சு நடந்து வருகிறது. கடந்த 5 மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5 முறை கல்வீச்சு நடந்துள் ளது. அந்த வகையில், 6வது முறையாக ஒடிசாவின் தேன் கனல் - அங்குல் ரயில்வே பிரி வில் மேரமண்டலி மற்றும் புதாபங்க் இடையே வந்தே பாரத் மீது கல்வீச்சு நடந்துள்ளது.
மேட்டூர் அணை நீர் வரத்து குறைந்தது
சேலம், நவ. 27 - காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்த தன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 4,431 கன அடியிலிருந்து 4,072 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 65.04 அடியாக, நீர் இருப்பு 28.58 டிஎம்சி-யாகவும் இருந்தது. குடிநீர் தேவைக்காக மட் டும் விநாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.35 அடியாகவும், வைகை அணையின் நீர்மட்டம் 65.16 அடியாகவும் இருந்தது.