states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தமிழ்நாடு மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை

கோடியக்கரைக்கு தென்கிழக்கே 41 நாட்டிகல் தூரத்தில் திங்களன்று அதி காலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப் போது மீன் பிடிக்க சென்ற அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஒரு படகு மற்றும் அதில் இருந்த 10 மீனவர்களை சிறைபிடித்துள்ளனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்த தாக கூறி, திருகோண மலைக்கு கொண்டு சென்று  மீனவர்களை விசாரணை நடத்தி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கவுள்ளனர்.

கலாஷேத்ரா விவகாரம்: விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியீடு

கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான விசாரணை குழுவின்  அறிக்கை வெளியிட்டுள் ளது. கலாஷேத்ரா அறக் கட்டளை தலைவர் ராம துரைக்கு பல்வேறு பரிந்துரைகளை விசாரணை குழு வழங்கியது. ஹரி பத்மனுக்கு அதிகபட்ச தண்ட னை வழங்கவும் அறிக்கை யில் பரிந்துரை செய்துள் ளது. அறிக்கையின் அம்சங் களை பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என்றும் விசாரணை குழு அறிவுறுத்தியுள்ளது.

சி.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

அதிமுக ஆட்சியில் சுகா தாரத்துறை அமைச்சராக சி.விஜயபாஸ்கர் பதவி வகித்தபோது வரு மானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்சஒழிப்புத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 29 அன்று விஜயபாஸ்கரும், அவரது மனைவியும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சித்தா, ஆயுர்வேதா படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது

சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்)  பட்டப் படிப்புகளுக்கு 2023-24-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநி யோகம் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் ஆகஸ்ட் 6 அன்று தொடங்கியது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்பேட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தகுந்த ஆவணங்களுடன் ஆகஸ்ட் 25 அன்று மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணை யரகம் தெரிவித்துள்ளது.

புதிய மாதிரி பாடத்திட்ட அறிவிப்பு: உயர்கல்வித்துறை அறிக்கை வெளியீடு

புதிய மாதிரி பாடத்திட்ட அறிவிப்பு குறித்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பு இல்லாத வகையில் 301 மாதிரி பாடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. மாதிரி பாடத்திட்டம் மறுசீர மைக்கப்படுவதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் நலனை மேம்படுத்துவதே ஆகும். பல்க லைக்கழகங்கள், கல்லூரிகளில் பாடப் பிரிவுகளுக்கு இடையே 75% இணைத்தன்மை இல்லை என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறையில் நில அபகரிப்பு பிரிவு செயல்படவில்லை

சென்னை, ஆக.7- தமிழ்நாட்டில் திமுக ஆட்சி காலத்தில் தனிநபர் சொத்துக்களை அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் அபகரித்த தாக குற்றம் சாட்டப்பட்டது. இதை யடுத்து, நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு காவல்துறையினர் தனி பிரிவு அதிமுக ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. மேலும், இந்த வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக் கப்பட்டது. இதுதொடர்பாக 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த இரு  அரசாணைகளை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவை  உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அரசுக்கு உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறி ஞர் ஸ்டாலின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்றம் அரசாணைகளை ரத்து  செய்துள்ள நிலையில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு தொடர்ந்து செயல்படுவது சட்டவிரோதமானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அரசுத்தரப்பில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு என்ற பெயரில் எந்த சிறப்பு பிரிவுச் செயல்படாது என்றும், இது சம்பந்தமான அறிவிப்பு வெளி யிடப்பட்டு உள்ளதாகவும், தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து, நில அபகரிப்பு பிரிவு தற்போது செயல்படவில்லை என சுற்றறிக்கை வெளியிடப்பட உள்ள தாகத் தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர் குறை நிவர்த்தி செய்யப்பட்டு உள்ள தாக கூறி, வழக்கை முடித்து வைத்த னர்.

மாரடைப்பால் கவுன்சிலர் உயிரிழப்பு

சென்னை, ஆக. 7- முன்னாள் முதலமைச்சர் கலை ஞரின் நினைவு நாளையொட்டி நடை பெற்ற அமைதிப் பேரணியில் பங்கேற்ற  மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் சண்முகம் மயங்கி விழுந்து உயிரி ழந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் அமைதிப் பேரணி நடை பெற்றது. இதில் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்ட சென்னை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பி னரும், 146ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஆலப்பாக்கம் சண்மு கம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த அவரை உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இவரது மறைவிற்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரி வித்துள்ளார்.

 தக்காளி விலை குறைந்தது

சென்னை,ஆக.7- ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ‘திடீர்’ மழை மற்றும் வட மாநிலங்களில் பெய்த கனமழையால் தக்காளி வரத்து பாதிக்கும் கீழ் குறைந்ததால் இந்த விலை உயர்வு என்று கூறப்பட்டது. தக்காளி விலையை கட்டுப்படுத்த ரேசன் கடைகளில் தக்காளி விற்ப னையை அரசு தொடங்கியது. அங்கு கிலோ ரூ.60-க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் வரத்து கடந்த சில நாட்களாக மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக தினசரி 30 லாரிகளுக்கும் மேல் தக்காளி வரத்து அதி கரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் தக்காளி விலை ரூ.100-க்கு கீழ் சரியத் தொடங்கி உள்ளது. கோயம்பேடு சந்தைக்கு திங்களன்று (ஆக.7) 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.