states

img

விளையாட்டு ஆசியக்கோப்பை கிரிக்கெட்

இந்தியா - இலங்கை இன்று பலப்பரீட்சை

ஆசியக்கோப்பை யாருக்கு?

கிரிக்கெட் உலகில் உலகக் கோப்பைக்கு அடுத்து முக்கிய தொடராக இருப்பது ஆசியக்கோப்பை ஆகும். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நட்சத்திர அணிகளும், வங்கதே சம், ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டாம் நிலை அபாயகரமான அணிகளும் இருப்பதால் ஆசியக்கோப்பைக்கு உலக ளவில் அங்கீகாரம் உள்ள நிலையில், பாகிஸ்தான், இலங்கை நாடுகளில் கூட்டாக நடைபெற்று வரும் 16-வது சீசன் ஆசியக்கோப்பை தொடரின் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான இந்தியாவும், 5 முறை சாம்பியனான இலங்கை அணியும் மோதுகின்றன. விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறும் இந்த ஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்பு வில் உள்ள பிரேமதேச மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தியா - இலங்கை

இடம் : பிரேமதேச மைதானம், கொழும்பு, இலங்கை
நேரம் : மதியம் 3:00 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம்)

யாருக்கு வாய்ப்பு?
இரு அணிகளை பலம், பலவீனம் ஆகியவற்றில் ஒப்பிடுகையில் இந்தியா சற்று பலமாக உள்ளது என்றா லும், போதியளவு பார்ம் இன்றி இந்திய அணி திணறலான ஆட்டத்தை வெளிப் படுத்தி வருகிறது. இதற்கு ஆதாரம் “சூப்பர் 4” சுற்றில் இந்திய அணி திக்கு திணறிதான் இறுதிக்கு முன்னேறியது. முக்கியமாக கடைசி “சூப்பர் 4” சுற்றில் வங்கதேசம் அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது. ஆனால் இலங்கை அப்படி அல்ல. அனைத்து ஆட்டங்க ளும் வலுவான ஆட்டத்திறனை வெளிப் படுத்தி இறுதிக்கு முன்னேறியுள்ளது. “இளம்கன்று பயமறியாது” என்ற சொல்லுக்கு ஏற்ப சற்று வித்தியாசமான பலத்தில் உள்ள இலங்கை அணி, வெற்றிக்காக எந்நேரத்தில், என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என்ற உள்வாங்கும் அதிரடி மன நிலையை கொண்ட இளம் வீரர்களை அணி யில் அதிகம் வைத்துள்ளது. இதனால் எந்த அணிக்கு கோப்பை என திடமாக கருத்துக்கூற முடியாது.

தெரிந்து கொள்வோம்...   

சிரமத்தை ஏற்படுத்தும் தாய்லாந்து விளையாட்டு உலகில் பலவிதமான பிரச் சனைகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று தாய்லாந்து வீரர் - வீராங்கனைகளின் பெயர்களை வாசிப்பது. காரணம் தாய்லாந்து நாட்டினருக்கு பெயர்கள் மிக நீண்டதாக இருக்கும்.  சிறிய அளவு பெயர்கள் 20 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கும். பெரியளவு பெயர்கள் என்றால் கேட்கவா வேண்டும். அதுவும் பெயர்கள் விரைவாக உச்சரிக்க முடியாத நிலையில் இருக்கும் என்பதால், விளையாட்டு உலகில் போட்டி அமைப்பாளர்கள், நடுவர்கள் தாய்லாந்து வீரர் - வீராங்கனைகளின் பெயர்களை வாசிக்க முடியாமல் 10 நிமிடம் எழுத்துக்களை ஆய்வு செய்த பின்னர் வசிப்பார்கள். எடுத்துக்காட்டிற்கு ஒருமுறை வசித்து பாருங்கள் : பிரபவதீ ஜரோஎன்ரட்டநாடரகூன் (Prapawadee Jaroenrattanatarakoon - தாய்லாந்து நாட்டின் பிரபல தடகள வீரர்)

மழையால் ஆட்டம் பாதிக்கும்

இறுதி ஆட்டம் நடைபெறும் கொழும்பு நகரில் ஞாயிறன்று வானிலைப்படி பலத்த மழைக்கு வாய்ப்பு ள்ளது. இதனால் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் இறுதி ஆட்டம் 80% மழையால் பாதிக்கப்படலாம். அவ்வாறு மழையால் பாதிக்கப்பட்டு நாள் முழுவதும் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டால், எந்த ஓவ ரில் ஆட்டம் நிறுத்தப்பட்டதோ அந்த ஓவரி லிருந்து அடுத்த நாள் நடைபெறும். அடுத்தநாளிலும் மழையால் பாதிக்கப் பட்டால் கோப்பை இருநாட்டிற்கும் பகிர்ந்த ளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. 

பரிசுத்தொகை
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு - ரூ. 2.49 கோடி 
2- ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு - ரூ.1.66 கோடி
(இதுபோக “சூப்பர் 4” லீக் சுற்றில் வெளியேறும் அணிகளுக்கு போதுமான பரிசுத்தொகை உள்ளது)