புதுதில்லி, நவ.20- உத்தரகாசியில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசி யல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரகண்ட் மாநி லம், உத்தரகாசி சுரங்கப்பாதை கட்டு மானப் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள், சுரங்கம் இடிந்து விழுந்ததன் காரணமாக, சுரங்கத்திற்குள் சிக்கி, வெளிவரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த கவலை யையும் வேதனையையும் தெரி வித்துக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள் ளது. மேலும், சம்பவம் நடந்து ஒரு வார மாகியும் அவர்களை மீட்கும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. மீட்புப் பணிக்காக ஒன்றிய அர சாங்கம், சர்வதேச நிபுணர்கள் மற்றும் ஏஜன்சிகளை ஏன் அழைத்திடவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது. சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை மீட்டிட, சமீபத்திய தொழில்நுட்பங்களில் திறமை படைத்த வல்லுநர்களைப் பயன் படுத்திடவும் அரசாங்கத்தால் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது. ந.நி.