states

சங்கம் வைக்கும் உரிமையைப் பறிக்க ஒரு போதும் அனுமதியோம்!

சென்னை சுற்றுவட்டார மாவட்ட ங்களில் சிறப்பு பொரு ளாதார மண்டலம், தொழிற் பூங்காக்களில்  இயங்கி வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் தங்களுக்கென சங்கத்தை அமைத்துக்கொள்கின்றனர். நிறுவன நுழைவு வாயிலில் சங்கக் கொடி, சங்கப் பெயர்ப் பலகை வைக்கின்றனர். இதை ஏற்க மறுக்கும் நிர்வாகங்கள் பணியிடை நீக்கம், ஊர்மாற்றம், சம்பளம் பிடித்தம், பணியிடத்தில் பாகுபாடு உள்ளிட்ட பழிவாங்கல் நடவடிக்கை களில் ஈடுபடுவதோடு; கொடி மரத்தை யும், பெயர்ப் பலகையையும் உடைத் தெறிகின்றன. இத்தகைய அராஜகத்தை எதிர்த்து தொழிலாளர்கள் போராடினால், காவல்துறை பல்வேறு பொய் வழக்கு களை பதிவு செய்வது, கைது செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடு கின்றன. சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தமிழ் தொழிலாளி, வட மாநில தொழிலாளி என இனப் பாகு பாட்டை வெளிப்படுத்தும் வகையில் தொழிலாளர்களிடையே பகமையை உருவாக்கும் வகையில் பேசிய பேச்சு கள் சமூக வலைதளங்களில் வந்துள் ளன. இத்தகைய பேச்சு, அவரது முதிர்ச்சி யற்ற மனநிலையை வெளிப்படுத்துகிறது. நிர்வாகத் திறமையற்றவர்  என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நியாய மான சம்பளம், சட்டப்படியான உரிமை கள் மறுக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் கடந்த ஆண்டு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பல்லாயிரக்கணக் கான பெண் தொழிலாளர்கள் முற்று கைப் போராட்டத்தை நடத்தினர். இன்னும் நீறுபூத்த நெருப்பாகத்தான் தொழி லாளர்களின் மனநிலை உள்ளது. சட்டப்படியான சங்கம் சேரும் உரிமை, கூட்டுப்பேர உரிமைக்கு எதிராக  எந்தவொரு நிறுவனமும் செயல்பட்டா லும் அது தொழிலாளர்களை கொதிப் படையவே செய்யும்; தொழிலாளர்கள் போராடவே செய்வார்கள். எனவே, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது கருத்துக்களை திரும்பப்பெறவும்,  தொழில் அமைதிக் கான சூழலை உருவாக்க சங்கம் சேரும் உரிமை, கூட்டுப்பேர உரிமைகளை அனைத்து தொழில் நிறுவனங்களில் உத்தரவாதப்படுத்தவும்,  தொழி லாளர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு களை திரும்பப்பெறவும் தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில்  செப்டம்பர் 25, 26 தேதிகளில் நடைபெற்ற  சிஐடியு மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து...