சென்னை, ஏப்.23- ராமஜெயம் கொலை வழக்கில் சரியான துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று சிறப்பு புலனாய்வு பிரிவு காவல் கண் காணிப்பாளர் ஜெயக்குமார் அறி வித்துள்ளார். தமிழக அமைச்சர் நேருவின் சகோ தரர் கே.என்.ராமஜெயம், கடந்த 2012 ஆம் ஆண்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில், காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட் டது. தமிழகத்தில் பரபரப்பை ஏற் படுத்திய இந்த சம்பவம் குறித்து தமிழ் நாடு காவல்துறை, சிபிசிஐடி, சிபிஐ என அனைத்துத்துறைகளும் விசா ரணை நடத்திய நிலையில், துப்பு கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்த ரவிட்டுள்ளார். தூத்துக்குடி எஸ்.பி. -யாக இருந்த ஜெயக்குமார் தலைமை யில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புல னாய்வு குழுவை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 15 நாட்களுக்கு ஒரு முறை விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் கண்காணிக்க வேண் டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு ஏப்ரல் 22 அன்று மீண்டும் விசா ரணைக்கு வந்தது. அப்போது, தமி ழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி சிறப்பு புலனாய்வு குழு விசாரணை குறித்து அறிக்கை தாக் கல் செய்தார். பின்னர் அவர், சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் புதிய துப்பு துலங்கியுள்ளது. சம்பவம் நடந்த காலத்தில் பணியில் இருந்த ஆறு போலீசார் உள்பட 198 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், உயர் அதிகாரிகளையும் விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்து டன், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள் ளது. 43 அதிகாரிகள் புலன் விசார ணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வும், விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் என்று கூறி யதுடன், கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50 லட் சம் ரூபாய் ரொக்க பரிசு அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரகசிய அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதி, விசாரணையை ஜூன் 10 ஆம் தேதி ஒத்திவைத்தனர். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 23 சனிக் கிழமையன்று எஸ்.பி., ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2012-ஆம் வருடம் மார்ச் 29 ஆம் தேதி தொழிலதிபர் கே.என். ராமஜெயம் என்பவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட் டது தொடர்பாக திருச்சி மாநகரம் தில்லைநகர் காவல் நிலைய குஎண். 128/12 ச/பி 3468 மற்றும் 302 இ.த.ச படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பான தகவல் கள் ஏதேனும் இருந்தால் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு தக வல் தெரிவிக்குமாறும் அவ்வாறு தக வல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசி யம் காக்கப்படும். இவ்வழக்கை துப்பு துலக்க சரியான தகவலை தருபவர் களுக்கு ரூ.50 லட்சம் பண வெகுமதி வழங்கப்படும் என்றும் எஸ்.ஜெயக் குமார், காவல் கண்காணிப்பாளர்: 9080616241 .ஆர். மதன், காவல் துணைக் கண்காணிப்பாளர்: 949812 0467, 7094012599 (வாட்ஸ் அப்). மின் னஞ்சல்: sitcbcidtri@gmail.com” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.