சென்னை, நவ.19- கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, நான்கு மருத்துவர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ள நிலையில் இரண்டு மருத்து வர்களை கைது செய்ய காவல்துறை தரப்பில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் குறித்து அவரது தந்தை பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், சந்தேக மரணம் (174) என்ற சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், பிரியா உயிரிழப்பு தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கு நர் சாந்திமலர் கடந்த 17 ஆம் தேதி சமர்ப்பித்த அறிக்கையில், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பின்னர், பிரியாவுக்கு அளிக்க வேண்டிய மருத்துவக் கவனிப் பில் ஏற்பட்ட குறைபாடே, அவரது இறப்புக்குக் காரணம் என்று குறிப் பிடப்பட்டிருந்தது. மேலும், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், மயக்கவியல் மருத்துவர், பணியில் இருந்த மருத்துவ அதிகாரி, எலும்பு சிகிச்சை மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர் (வார்டு ஊழியர்) ஆகிய 5 பேரின் கவனக் குறைபாடு, அலட்சியம் ஆகியவை மாணவி பிரியாவின் உயிரிழப்புக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டி ருந்தது. இதையடுத்து, சந்தேக மரணம் என்ற பிரிவிலிருந்து, அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்துதல் 304 (ஏ) என்ற புதிய பிரிவில் 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து, காவல்துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகாருக்கு உள்ளான 4 மருத்துவர்களில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த இரண்டு மருத்துவர்களும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், தற்போதைய நிலையில் மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி, வழக்கை தள்ளி வைத்தது. இந்நிலையில், மருத்துவர் களை கைது செய்ய மூன்று தனிப்படை களை காவல்துறை அமைத்துள்ளது.