states

இன்று மகளிர் உரிமை மாநாடு: சோனியா, சுபாஷினி அலி பங்கேற்பு

சென்னை, அக்.13- மறைந்த முன்னாள் முத லமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி, திமுக மகளிரணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சனிக்கிழமை (அக்.14) மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை வகிக் கும் இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலை வர் சோனியா காந்தி, காங்கி ரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி  உள்ளிட்ட இந்தியா கூட்ட ணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பெண் தலை வர்கள் கலந்து கொள்கின்ற னர். இதற்காக நந்தனம் மைதானத்தில் பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஏற்பாடு களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளியன்று (அக்.13) நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.