u அரபு அமீரகத்தில் நடக்கும் சூழலியல் பாதுகாப்பு மாநாடு காப் 28 மாநாட்டுக்கு இஸ்ரேல் அழைக்கப்பட்டுள்ளது. அதன் ஜனாதிபதி பங்கேற்கிறார். இது பல விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதே சமயத்தில் இஸ்ரேல் பங்கேற்பதால் ஈரான் ஜனாதிபதி இந்த நிகழ்வை புறக்கணிப்பது என அறிவித்துள்ளார்.
u தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஹமாசையும் இஸ்ரேலையும் ஏற்றுகொள்ள வைப்பதில் வெற்றி அடைந்த கத்தார் நிரந்தர போர் நிறுத்தத்துக்கு முயல்வதாகக் கூறியுள்ளது. வெற்றி கிடைக்குமா? கானல் நீராகுமா என்பது வரும் நாட்களில் தெரியும்.
u ஜெருசலம் பகுதியில் இரு பாலஸ்தீன சகோதரர்கள் ஒரு பேருந்து நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்னொரு சம்பவத்தில் ஒரு இஸ்ரேலியர் பாலஸ்தீன கர்ப்பிணி பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார். ஜெருசலம் துப்பாக்கிச் சூட்டுக்கு ஹமாஸ்பொறுப்பு ஏற்றுள்ளது. இஸ்ரேலியர்களின் சுய பாதுகாப்புக்காக அவர்களுக்கு நவீன துப்பாக்கிகள் தரப்போவதாக இஸ்ரேலிய வலதுசாரி அமைச்சர் பென் விர் கூறியுள்ளார். இந்த நிகழ்வுகள் போர் நிறுத்தம் எத்தகைய சிக்கலான சூழலில் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
u மனித உரிமைகள் பற்றி இஸ்ரேல் சிறிதும் கவலைப்படவில்லை எனவும் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஐரோப்பிய நாடுகளின் சொந்த நலனுக்கு நல்லது எனவும் ஸ்பெயின் பிரதமர் மீண்டும் கூறியுள்ளார். இஸ்ரேல் அவர் மீது கடும் கோபம் கொண்டுள்ளது.
u 1950ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா இஸ்ரேலுக்கு விமானங்கள்/ பீரங்கிகள்/ குண்டுகள் என 70,000 வகையான ஆயுதங்களை தந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஆயுதங்கள் இல்லையேல் இஸ்ரேல் இல்லை என்பதே உண்மை.
u கனடாவின் யூத திரைப்பட பெண் தயாரிப்பாளர் யூலா இஸ்ரேலின் அக்கிரமங்களை கண்டித்து தனது இஸ்ரேலிய குடியுரிமையை புறக்கணித்துள்ளார். இதன் விளைவாக அவரது குடும்பத்தினர் கூட அவரை கண்டிக்கின்றனர். எனினும் மிகுந்த மனோ தைரியத்துடனும் அதே சமயத்தில் வேதனையுடனும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
u “காசாவை கசாப்பு செய்தவர்” எனும் இழிபெயர் நேதன்யாகுக்கு வரலாறு சூட்டப்போகிறது என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கூறியுள்ளார். ஆனால் இதே நேதன்யாகுவுடன் சில மாதங்களுக்கு முன்பு எர்டோகன் கை குலுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. துருக்கி மக்களின் இஸ்ரேல் மீதான கடும் கோபம் எர்டோகனை மாற்றியுள்ளது.
u இஸ்ரேலுக்கு பணயக்கைதிகளை விடுவிக்க கத்தார் தேவைப்படுகிறது. ஆனால் பின்னர் ஹமாசுக்கு உதவியதற்காக கத்தாரை சும்மா விடப்போவது இல்லை என ஜோஷுவா சகாரா எனும் பிரான்சுக்கான இஸ்ரேலிய தூதர் கூறியுள்ளார். நன்றி மறப்பதும் சியோனிசத்தின் ஒரு குணம் போலும்.