states

மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு

மதுரை, ஜூலை 22-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி மற்றும் கூட்டணி கட்சி தலை வர்கள் பங்கேற்கும் - மாநில உரிமை  பாதுகாப்பு மாநாடு ஞாயிறு மாலை மதுரை  ஓபுளா படித்துறை அருகில் நடைபெறு கின்றது.  இந்த மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் சனிக் கிழமை அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக் குழு அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், துணை மேயர் டி.நாக ராஜன், தெற்கு பகுதிக்குழு செயலாளர் ஜெ.லெனின் ஆகியோர் அவருடன் இருந்தனர்.  அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், எதிர்க்கட்சிகள் ஆளு கின்ற மாநிலங்களின் உரிமையை அப்பட்டமாக பறிப்பது, சட்டமன்றத்தில் உரிமைகளை மீறி ஆளுநர்கள் நடந்து கொள்வது, அமைச்சரவையின் அதி காரங்களில் குறுக்கிடுவது, முதலமைச்ச ரின் அதிகாரத்தை விட தனக்கு அதிகாரம் அதிகம் உள்ளது போல் செயல்படுவது இப்படி எல்லா தலங்களிலும் மாநிலங்க ளின் உரிமைகளை பறிக்கின்ற மற்றும் நிராகரிக்கின்ற மதிக்கத் தவறுகின்ற வேலையை ஆளுநர் செய்து கொண்டி ருக்கின்றார். எனவே மாநில உரிமையை பறிக்கின்ற போக்கிற்கு எதிராக மாநில உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒரு மிகப்பெரிய மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மதுரையில் நடத்துகின்றது.  இந்த மாநில உரிமை பாதுகாப்பு மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார், மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், தோழமைக் கட்சி தலைவர்கள் திமுக சார்பில் மாநி லங்களவை உறுப்பினர்கள் குழுவின் தலைவர் திருச்சி சிவா, காங்கிரஸ் மாநி லத் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் நிறுவனத் தலைவர் முனை வர் தொல். திருமாவளவன், மதிமுக சார்பில் அரசியல் குழு ஆலோசகர் ஆர்.ரவிச்சந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாநிலத் தலைவர் கே.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது, அகில  இந்திய ஃபார்வர்டு பிளாக் பொதுச் செய லாளர் பி.வி.கதிரவன், கொங்கு நாடு மக்  கள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்ட தோழமைக் கட்சி  தலைவர்கள் பங்கேற்று சிறப்புரை யாற்றுகிறார்கள். இந்த அரசியல் முழக் கத்திற்காக மாநில உரிமை பாதுகாப்பு மாநாட்டை மதுரையில் வெகு சிறப்பாக நடத்த இருக்கின்றோம் என்றார்.