கோயம்புத்தூர், நவ.13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவம்பர் புரட்சி தின சிவப்பு சீருடை பேரணி மற்றும் அரசியல் விளக்கக் கூட்டம் கோவையில் நவம்பர் 14 (இன்று) மாலை 6 மணியளவில் கோவை மலையாளி சமாஜத்தில் நடைபெறுகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று சிறப்புரை நிகழ்த்துகிறார். மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பி.ஆர்.நடராஜன் எம்.பி., என்.குணசேகரன், ஏ.ராதிகா, யு.கே.சிவஞானம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.