தில்லி பகுதியின் முக்கிய அடுக்குமாடி குடி யிருப்பான முகர்ஜி நகரின் சிக்னேச்சர் வியூ அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க தில்லி மேம் பாட்டு ஆணையம் (டிடிஏ) முடிவு செய்துள்ளது. இடத்தை காலி செய்ய 45 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. கடந்த 2022இல் நவம்பர் தில்லி ஐஐடி நிபுணர்கள் சிக்னேச்சர் வியூ அடுக்குமாடி குடியிருப்பு வசிக்க தகுந்தது அல்ல என்று சான்றி தழ் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா கல்வி அமைச்சர் பி.சபிதா இந்திரா ரெட்டியின் பாதுகாப்பு அதிகாரி முகமது பசல் அலி(59) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலை யில், பாஜக 5-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை ஞாயிறன்று வெளியிட்டது.
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் ஞாயி றன்று கார் - லாரி மோதிய விவகாரத்தில் திரு மணத்திற்குச் சென்ற மணமகன் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
‘இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயரின் பின்னால் இருக்கும் சாதிப் பெயர்களை நீக்க பிசிசிஐ அறிவுறுத்த வேண்டும்’ என காங்கி ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
தில்லி-என்சிஆர் பகுதியில் காற்றின் தரம் மோசமடைந்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழி யர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வது உள்ளிட்ட அவசர நடவடிக்கைகளை அமல்படுத்து மாறு தில்லி அரசுக்கு ஒன்றிய அரசு உத்தர விட்டுள்ளது.
அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கருத் தில் கொண்டு தீபாவளி பண்டிகைக்கு கியூஆர் குறியீடு கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய முடிவு செய்ய மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தோ்தல் நடைபெற வுள்ளது. அதில் முதல்கட்டமாக 20 தொகுதிகளில் செவ்வாயன்று (நவம்பர் 7) வாக்குப்பதிவு நடை பெறுகிறது. அதே போல வடகிழக்கு மாநிலமான மிசோரமிலும் நவம்பர் 7 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இரு மாநிலங்களிலும் ஞாயிறன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.