states

img

கர்நாடகா 2-ஆவது கோத்ராவாக மாறுமாம் ஸ்ரீராம் சேனா தலைவர் வெறிப்பேச்சு

கர்நாடக மாநிலம் கலபுர்கி பகுதி யின் ஜேவர்கி தாலுகாவில் உள்ள  அந்தோலா மேட்டைச் சேர்ந்த வர் சித்தலிங்கசாமி. இவர் தீவிர இந்துத்  துவா அமைப்பான ஸ்ரீராம் சேனாவின் கர்நாடக பிரிவு தலை வராக இருக்கிறார். இவர் கடந்த அக்டோ பர் 3 அன்று யாத்கிர் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதூர்த்தி விழாவில் பொதுமக்கள் முன்னிலையில்,“இந்துக்களை இழிவு படுத்தினால் கர்நாடகா இரண்டாவது கோத்ராவாக மாறும்” என்று அச்சுறுத்தி யுள்ளார். சித்தலிங்க சாமியின் இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைர லாகி வருகிறது. இந்நிலையில், ஷாஹாப்பூர் போலீசார் தானாக முன்வந்து இந்திய தண்டனைச் சட்டம் 295 (ஏ) மற்றும் 153 ஆகிய பிரிவுகளின் கீழ் சித்தலிங்க சாமி மீது வழக்குப்பதிவு செய்தனர்.