states

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி கிழிந்த ஆடையுடன் தெருவில் உதவி கோரிய அவலம்

பாஜக ஆளும் மத்  தியப் பிரதேசத் தின் உஜ்ஜைனி பகுதியில் பாலியல் வன்  கொடுமைக்கு உட்படுத்தப் பட்ட 12 வயது சிறுமி ஒருவர்  கிழிந்த ஆடைகளுடன் தெரு வில் உதவி கோரியுள்ளார். கிட்டத்தட்ட 4 மணிநேரத்திற்கு  மேலாக ஒரே பகுதியில் அந்தச் சிறுமி சுற்றித் திரிந்  தும் யாரும் உதவவில்லை. ஒரு வீட்டின் முன்னால் நின்று  உதவி கேட்க, அங்கிருக்கும் நபர் அச்சிறுமியை விரட்டி யடித்துள்ளார். அதன்பின் மாலை நேரத்தில் சிறுமியின் நிலைமையை கண்ட போலீஸ்  ஒருவர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்  துள்ளார். அங்கு நடந்த  மருத்துவப் பரிசோதனை யில் சிறுமி பாலியல் வன்  கொடுமைக்கு உட்படுத்தப் பட்டது உறுதியாகி உள்ளது. அந்தச் சிறுமிக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக உஜ்ஜைனி நக ரின் போலீஸ் எஸ்.பி. சச்  சின் சர்மா கூறியுள்ளார். பாலி யல் வன்கொடுமைக்குப் பின்  சிறுமி கிழிந்த ஆடையுடன் தெருவில் உதவி கோரும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி வீடியோ தொகுப்பு சமூகவலைதளங்களில் கடும் கண்டனத்துடன் வைர லாகி வருகிறது. காங்கிரஸ் கண்டனம் இந்த சம்பவம் குறித்து மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் கூறுகையில், “இந்தச் சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. குற்ற வாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், 12 வயது  சிறுமி ஒருவர் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு உதவி கோரி தெருத்தெரு வாக திரிந்து கடைசியில் சாலையில் மயங்கி விழுந்த சம்பவம் மனிதகுலத்துக்கே அவமானம்” என தனது  டுவிட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.