லக்னோ, மே 20 - அண்மையில் வெளியாகி கடும் எதிர்ப்புக்கு உள்ளான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்து மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் ‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் முஸ்லிம் மதத்திற்கு மாற்றப்படுவதாக வும், மேலும், அவர்கள் சிரியாவிற்கு அனுப்பிவைக் கப்பட்டு, அங்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப் பிற்கு பலிகடா ஆக்கப்படுவதாகவும், இந்த திரைப் படத்தில் சித்தரிக்கப்பட்டு இருந்தது. எந்த ஆதாரமும் இல்லாமல், 32 ஆயிரம் இந்துப் பெண்கள் இவ்வாறு மதம் மாற்றப்பட்டு உள்ளதாகவும் இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறு பரப்பியது.
ஆனால், இந்துச் சாமியார் ஒருவர் 78 இஸ்லா மிய பெண்களை இந்து மதத்துக்கு மாற்றி திருமணம் செய்து வைத்த உண்மைச் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநில பரேலியில் உள்ள மதினாத் பகுதியில் அமைந்திருக்கும் அகஸ்தியா முனி ஆசிரமத்தில் ஆச்சாரியார் பண்டிட் கே.கே. சங்காதர் என்பவர் வசித்து வருகிறார். பல்வேறு இந்துத்துவா கும்பல்களுடன் தொடர்பில் இருக்கும் இவர், சமூக வலைத்தளங்களிலும் கணக்குகள் வைத்து, பெண்களோடு பேசி வந்துள்ளார். அவ்வாறு தன்னிடம் பேசும் இஸ்லாமியப் பெண்களை மதம் மாற்றம் செய்து அவர்களை, அவர்களின் இந்துக் காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இவ்வாறு சுமார் 78 முஸ்லிம் பெண்களை, சாமி யார் கே.கே. சங்காதர் இந்து மதத்துக்கு மாற்றம் செய்து திருமணம் செய்து வைத்திருப்பதுதான் தற்போது தெரியவந்துள்ளது. இந்தி நாளிதழ் குழு ஒன்று, இதுதொடர்பான உண்மைகளை, விரிவான ஆய்வுக்குப் பிறகு வெளிக்கொண்டு வந்துள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு முதல்முறையாக ஒரு முஸ்லிம் பெண்ணை இந்துவாக மதமாற்றி திரு மணம் செய்து வைத்ததாகவும், அதற்கு அடுத்து பல இஸ்லாமியப் பெண்களை இதேபோன்று மதம் மாற்றி திருமணம் செய்து வைத்ததாகவும் சாமியார் கே.கே. சங்காதரே கூறியுள்ளார். சாமியார் சங்காதரின் உண்மையான பெயர் கிருஷ்ணகுமார் சர்மா என்பதாகும். ராம்பூரை பூர்வீக மாக கொண்ட சங்காதர் பரேலிக்கு 40 ஆண்டுக்கு முன்பாக இடம்பெயர்ந்துள்ளார். இங்கு இந்துத்துவா கும்பல்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட சங்காதர், முஸ்லிம் பெண்களை மதமாற்றும் நடவ டிக்கையில் இறங்கியுள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு முகநூலில் சிம்மி கான் என்ற பெண், தன்னை தொடர்புகொண்டு, இந்து இளைஞரை காதலிப்பதாக தெரிவித்ததாகவும், எனி னும், மதம் காரணமாக அந்தப் பெண், இந்து இளைஞ ரைத் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்காத நிலை யில், காவல்துறையை பயன்படுத்தி அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்ததாகவும் சாமியார் சங்காதர் தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, இதேவேலையாகவே இருந்த சாமியார் சங்காதர், பல முஸ்லிம் பெண்களை இதுபோல் இந்து மதத்துக்கு மாற்றி திருமணம் செய்து வைத்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இத னால், இந்துவாக மதம் மாற்றப்பட்ட முஸ்லிம் இளம் பெண்களின் எண்ணிக்கை 2022-ஆம் ஆண்டு 35 ஆகவும், கடந்த ஆண்டு 40 ஆகவும் அதிகரித்து இருக் கிறது. தற்போது தனியார் நாளிதழ் குழு நடத்திய ஆய்வின் முடிவில், சாமியார் சங்காதர் 78 முஸ்லிம் பெண்க ளை இந்து மதத்துக்கு மாற்றம் செய்தது தெரியவந்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்தி நாளிதழ் குழு சாமியாரின் இருப் பிடத்திற்குச் சென்றபோது, ஏராளமான கேள்விகளை கேட்ட பிறகே சாமியார் அவர்களை உள்ளே அனுமதித்து உள்ளார். ‘ஏன் இவ்வளவு கேள்விகளை கேட்கிறீர் கள்’ என்றதற்கு, தன்னுடைய உயிருக்கு அச்சுறுத் தல் உள்ளதாகவும், தினமும் பலர் தன்னைத் தேடி வருவதாகவும் சாமியார் சங்காதர் கூறியுள்ளார்.