சனா, செப்.10- தென்மேற்கு ஆசியாவில் அரேபிய தீபகற்பத்தின் தென்மேற்கு கரையில் அமைந்துள்ளது ஏமன். 3 கோடி மக்கள் தொகையில் 1.7 கோடி பேர் மோசமான உணவு பாதுகாப்பின்மை நிலையில் வாழ்கின்றனர். பல்வேறு சர்வதேச ஏஜென்சிகளின் உதவி ஏமன் மக்களுக்கு கிடைத்து வருகிறது. ஐநாவின் உலக உணவுத் திட்டம் வழங்கி வந்த உணவுப் பொருட்களின் அளவு இம்மாதம் முதல் குறைக்கப் படுகிறது. இதற்கு காரணம், ஆறு மாதங்களுக்கு ஏமனுக்கு உணவு உதவி புரிய 117 கோடி டாலர் தேவைப் படுகிறது. ஆனால் இதில் 20% நிதி மட்டுமே உலக உணவுத் திட்டம் இதுவரை பெற்று உள்ளது . மிகப் பெரும்பான்மையோர் ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம் மக்கள். அரசியல் கவுன்சில், ஏமன் நாட்டில் மனிதாபிமான நெருக்கடியை கொண்டு வர அமெரிக்கா முயற்சிப்பதை விமர்சித்துள்ளது. சவூதி அரேபியாவின் யுத்தம் மற்றும் பொருளாதார தடைகளால் 2015 முதல் ஏமன் நாட்டு பெரும்பான்மை மக்கள் உணவுக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.