states

ஆவின் அதிகாரிகளுக்கு உணர்திறன் பயிற்சி

சென்னை,மே 12- மாநில அரசுத் துறைகள் தங்களுக்கு  தேவையான பொருட்களை கொள்முதல்  செய்யும் போது ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட  தயாரிப்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என இந்தியத் தர நிர்ணய அமைப்பு (பிஐஎஸ்) வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக சென்னையில் வியாழனன்று(மே 12)  தமிழ்நாடு பால்  உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) அதிகாரிகளுக்கான விழிப்பு ணர்வு மற்றும் பயிற்சியை  இந்தியத் தர  நிர்ணய அமைப்பு நடத்தியது. இதனை துவக்கிவைத்து  தமிழக அரசின் முதன்மைச் செயலாளர்  வி.இறையன்பு பேசுகையில், தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக, தங்கள் துறைகளில் உள்ள தரநிலைகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தகைய பயிற்சியின்  நோக்கம் என்றார். பிஐஎஸ் தென் மண்டல துணை இயக்கு நர் யுஎஸ்பி யாதவ்பிஐஎஸ், திட்டத்தின் நோக்கத்தை விளக்கினார், முன்னதாக பேசிய   விஞ்ஞானி ஜி.பவானி, தரநிர்ணயம்  மற்றும்  உரிமம் வழங்குதல் குறித்து விளக்கினார்.