states

img

மூத்த புகைப்படக் கலைஞர் மறைவு: முதல்வர் இரங்கல்

சென்னை,ஜன.2- தி இந்து ஆங்கில நாளிதழின் மூத்த புகைப்படக் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில்,“தி இந்து  ஆங்கில நாளித ழில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த கே.வி. சீனிவாசன் (56), திங்களன்று (ஜன.2) அதிகாலை 04.30 மணிக்கு சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி வைபவ நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து வெளியிடுவதற்கான பணி யிலிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பதை  அறிந்து மிகவும் வேதனை யடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஊடகத் துறை நண்பர்களுக்கும் எனது  ஆறுதலையும், ஆழ்ந்த இரங்க லையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும், தமிழ்நாடு  அரசின் பத்திரிகை யாளர் குடும்ப உதவி  நிதித் திட்டத்தின் கீழ் உயிரிழந்த கே.வி.சீனிவாசன் குடும்பத் தாருக்கு ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவிட்டு ள்ளேன்” என்று கூறியுள்ளார். பத்திரிகையாளர் சங்கங்கள் மூத்த புகைப்பட கலைஞர் மறைவுக்கு சென்னை பத்திரிகை யாளர் சங்கம் (எம்யூஜெ) பொதுச்  செயலாளர் சங்கர், தமிழ்நாடு புகைப்பட கலைஞர்கள் சங்கத்  தலைவர் ஜோதி ராமலிங்கம், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க  (டியூஜெ) மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருசோத்தமன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித் துள்ளனர். மேலும், உடனடியாக குடும்ப நிதி வழங்கிய முதலமைச் சருக்கு நன்றியும் தெரிவித்திருக் கிறார்கள்.