சென்னை, மே 16- சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளையும் உட மைகளையும் சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்த னர். அப்போது சென்னையை சேர்ந்த ஒரு இளைஞரிடம் வெள்ளை நிற முள்ளம் பன்றி மற்றும் டாமரின் மங்கி எனப்படும் வெளி நாட்டு குரங்கு குட்டி இருந்தது. வெளி நாட்டில் இருந்து கொண்டு வருவதற்கான அனுமதி சான்று இல்லை என்பதால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் இது குறித்து சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவுக்கும் தகவல் கொடுத்தனர்.