states

1.275 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை, ஜுன் 26- சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், கொழும்புவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த  மூன்று பெண் பயணி களை வழிமறித்து சுங்கத் துறை புலானாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை யிட்டனர்.  இந்த சோதனையின் போது 3 பயணிகளும் தங்க ளது உள்ளாடை மற்றும் ஹேர் பேண்டுகளில் பசை வடிவில் மறைத்து கடத்தி வந்த 1.275 கிலோ தங்கம் பறி முதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.59.26 லட்சம் ஆகும். இதையடுத்து அவர்கள் 3பேரும் கைது செய்யப்பட்டு மேலும் விசாரணை நடை பெற்று வருவதாக சுங்கத் துறை கூடுதல் ஆணையர் வி.பழனியாண்டி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.