பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்: முதல்வர் அழைப்பு
“பெற்றோர்களே, உங்கள் மகனோ, மகளோ 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு முடிக்காமல் பள்ளியிலிருந்து இடைநின்றிருந்தாலோ அல்லது அவ்வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற பின்பு உயர்கல்வியைத் தொடராமல் விட்டிருந்தாலோ அல்லது அந்த வகுப்பு களில் தோல்வியுற்றிருந்தாலோ அவர்களுக்கு நாம்தான் நல்வழி காட்ட வேண்டும். இதற்காக வரும் ஜூலை 19-ஆம் தேதி மாலை 4 மணிக்கு அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதில், உயர்கல்வி குறித்து உங்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்குவதற்கு வழிகாட்டும் குழுவும் பள்ளிகளில் உங்களுக்காக காத்தி ருக்கும். அதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் தவறாமல் பங்கேற்க வேண்டும். அறி வார்ந்த சமுதாயத்தைக் கட்டமைப்போம் வாருங்கள்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.
ஜெருசலேம் யாத்திரைக்கு ரூ.37,000 வழங்க நடவடிக்கை
ஜெருசலேம் புனித யாத்திரை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறும் நடவடிக்கை தொடங்கப்பட்டு, விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஜெருசலேம் செல்வோருக்கு மானியமாக 37 ஆயிரம் ரூபாயும், 50 கன்னியாஸ்திரிகளுக்கு தலா ரூ.60 ஆயிரமாக மானியம் வழங்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டடுள்ளதாக சிறுபான்மை யினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் பரிசு
விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ரூ.10,000 வெகுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சாலை விபத்தில் காயம் அடைந்த நபர்களுக்கு உதவு வோரை ஊக்குவிக்கும் வகையில் தொகை வழங்கப்படும் எனவும் அரசாணை தெரிவித்துள்ளது.
பாஜகவினர் நேர்மையானவர்கள் கிடையாது: கே.எஸ்.அழகிரி
அமைச்சர் செந்தில்பாலாஜி, மொரிசீயஸ் தீவில் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக அண்ணா மலை குற்றச்சாட்டுகிறார். அடிப்படை ஆதாரமில்லாமல், நாகரீகம், பண்பாடு இல்லாமல் அவர் பேசி வருகிறார். செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் நிரூப்பிக்கப்படாத வரை அவர் குற்றவாளி கிடையாது. 33 ஒன்றிய அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. செந்தில்பாலாஜி மீது குற்றஞ்சாட்டும் அளவுக்கு பாஜகவினர் நேர்மையானவர்கள் கிடையாது என காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை.ஜூலை 16- தமிழகம், புதுச்சேரியில் திங்கட்கிழமை (ஜூலை 17) ஓரிரு இடங்களில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப் படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப் பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமர்நாத்தில் சிக்கிய தமிழர்கள்: மாநில அரசு மீட்பு
சென்னை,ஜூலை 16- சென்னை: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் கோவிலுக்கு புனித யாத்திரையாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர், முருகானந்தம் செல்வி, சாவித்திரி உள்பட 17 பேர் சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அமர்நாத் அருகே ஏற்பட்ட பணிச்சரிவு காரணமாக, ஸ்ரீநகருக்கான பாதை முற்றிலும் சேதமடைந்து அங்கேயே அவர்கள் சிக்கிக்கொண்டனர். இதனால் அவர்கள் அப்பகுதியில் இருந்து வர முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமர்நாத்தில் சிக்கிய தமிழர்கள் அனைவரை யும் பத்திரமாக மீட்டு அழைத்து வர தேவையான நட வடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 13-ந்தேதி அவர்களை பாது காப்பாக அழைத்து வந்து புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைத்தனர். மேலும் 17 பேருக்கும் ரயில் மூலம் சென்னை திரும்ப தமிழக அரசின் மூலம் டிக்கெட் எடுத்து வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் ரயில் மூலம் சனிக்கிழமை இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர். அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அதிகாரிகள் வர வேற்றனர். பின்னர் 17 பேரையும் சொந்த ஊர்களுக்கு வழியனுப்பி வைத்தனர்.
கோயிலில் இந்து முன்னணி தகராறு
கிருஷ்ணகிரி,ஜூலை16- கிருஷ்ணகிரி ராசு வீதியில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சந்திர மெளலீஸ்வரா் கோயிலில் உண்டியலை எண்ணும் பணி ஞாயிறன்று (ஜூலை 16) நடைபெற்றது. அப்போது அங்கு வந்த இந்து முன்னணி மாவட்டத் தலைவர் கலைகோபி மற்றும் சிலா் அலுவலர்க ளிடம் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து, காணிக்கை எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து இந்து முன்னணியினர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப் பட்டது.