சென்னை,மே 6- மருத்துவ மாணவர்கள் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்றது ஒன்றிய பாஜக அரசின் சூழ்ச்சியே என்றுஇந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநி லத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநி லச் செயலாளர் வீ.மாரியப்பன்ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மதுரை மருத்துவக் கல்லூரி யில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்று நடைபெற்ற நிகழ்வில் வழக்கமாக எடுக்கும் ‘ஹிப்போகிர டிக்’ உறுதிமொழிக்குப் பதிலாக சமஸ் கிருத உறுதிமொழி எடுத்துள்ளனர். தேசிய மருத்துவ ஆணை யம் (என்.எம்.சி) வழிகாட்டுதல்படியே உறுதிமொழி ஏற்றதாகமருத்து வக்கல்லூரி மாணவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இது முழுக்கஒன்றிய அரசின் சமஸ்கிருத மயமாக்கும் சூழ்ச்சியே . எனவே தமிழக அரசு ஒன்றிய அரசின் நடவ டிக்கையை எதிர்ப்பதோடு அதற்கு பின் இருக்கக்கூடிய இந்துத்துவா அரசியல் சூழ்ச்சியை எதிர்க்க வேண்டும். மதுரை மருத்துவக் கல்லூரி டீன்தொடர்வார் என்ற அமைச்சரின் அறிவிப்பை இந்திய மாணவர் சங்கம் வரவேற்கிறது. அதே நேரத்தில் ஒன்றியஅரசின் சமஸ்கிருத திணிப்பை வன்மை யாகக் கண்டிக்கின்றோம். கல்வி நிலையங்களைகாவிமயமாக்கும் ஒன்றிய அரசுக்கு வலுவான எதிர்ப்பை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.