தற்கொலைகளை கட்டுப்படுத்த பாராசிட்டமால் மாத்திரைகளின் விற்பனையை வரைமுறைப் படுத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பத்தூரை அடுத்த ஏலகிரி பகுதியில் 2020இல் 17 வயது சிறுவன் கொலை வழக்கில் கைதான தயாளு, குமார், ராகுல் ஆகிய மூவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் பட்டாசுகள் வெடிக்கும் போது அதன் மீது கால் வைத்த கீழகன்னிசேரியை சேர்ந்த உதயமூர்த்தி (29) என்பவரின் வலது காலின் சதைப் பகுதிகள் சிதறிய நிலையில், படுகாயத்துடன் அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மைக்ரோசாப்ட் பிரிவின் முக்கிய பிரி வான பவர்பாயிண்ட் (Power Point) பிரிவின் இணை நிறுவனர் டெனிஸ் ஆஸ்டின் (76) புற்றுநோய் பாதிப்பால் காலமா னார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி விவகாரம் தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில், நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி நிறுவனத்தின் இயக்குநர் ஹேமந்த் ஆஜரான நிலையில், அவரிடம் விசா ரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
சென்னையில் அரசால் சீல் வைக்கப்பட்ட வன்னியர் சங்க கட்டடத்தில் உள்ள சான்றி தழ், லேப்டாப்களை மாணவர்கள் எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடன் தந்ததன் மூலம் இழப்பு ஏற்படுத்தியதாக ரூ.600 கோடி மோசடி தொடர்பாக ஐடிபிஐ வங்கி அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரித்து, வங்கி அதிகாரிகள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
சென்னையில் போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 15.35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.