states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்  தமிழக அரசு மேல்முறையீடு

புதுதில்லி, அக்.31- ஆர்.எஸ்.எஸ். ஊர்வல த்துக்கு அனுமதியளித்து,  கடந்த அக். 16 அன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. பொது அமைதியை கரு த்தில் கொண்டு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் தமிழக அரசு  கூறியுள்ளது. இந்த  மேல்முறையீட்டு வழக்கு நவம்பர் 3-அன்று விசார ணைக்கு வருகிறது.

நவ. 3இல் காவிரி ஆணைய கூட்டம்

புதுதில்லி, அக்.31-       காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை அடுத்து, நவம்பர் 3- அன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஆணை யத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற உள்ளது. காவிரியில் நவம்பா் 1 முதல் 23-ஆம் தேதி வரை வினாடிக்கு 2,600 கன அடி தண்ணீரைத் தமிழகத்திற்கு திறந்துவிடவேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு, திங்களன்று பரிந்துரைத்தது. இதையடுத்து காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரை குறித்துப் பரி சீலிக்க வரும் நவம்பர் 3 அன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடை பெற உள்ளது. 

86 எம்பிபிஎஸ் இடங்கள்   தமிழக அரசிடம் ஒப்படைப்பு

சென்னை, அக்.31- தமிழகத்தில், அகில இந்திய ஒதுக்கீட்டின்  கீழான 86 இடங்களை ஒன்றிய அரசு நிரப்பாமல் வைத்திருந்தது. இந்த இடங்களை மாநில அரசிடம் தருமாறு  தமிழக அரசு கோரிக்கை விடுத்து வந்தது. ஆனால் அதனை ஏற்காமல் காலதாமதம் செய்து வந்த ஒன்றிய பாஜக அரசு ஒருவழியாகத் தற் போது ஒப்புதல் வழங்கி யுள்ளது. இதையடுத்து அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு  நவம்பர் 7-  ஆம் தேதி வரை கலந் தாய்வு நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நவம்பர் 7  முதல் 15 வரை நடைபெறும் என மருத்துவ சுகாதார இயக்குநரகம் அறிவித்துள் ளது.

கருக்கா வினோத் ஜாமீனை ரத்து செய்யக் கோரிக்கை

சென்னை. அக்.31- பாஜக அலுவலகம் மீதான பெட்ரோல் குண்டு தாக்குதல் வழக்கில் ரவுடி கருக்கா வினோத்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற த்தில் காவல்துறை மனுத் தாக்கல் செய்தது.  “ஜாமீன் பெற்ற வினோத், ஆளுநர் மாளிகை அருகே பெட் ரோல் குண்டு வீசியுள்ளார். சமூகத்திற்கும் பொதுமக்க ளும் ஆபத்தை விளைவி க்கும் செயலில் கருக்கா வினோத் ஈடுபட்டுள்ளார் என மனுவில் தெரிவித்துள்ளது. இதன் மீது நவ.15க்குள் பதி லளிக்க நீதிமன்றம் வினோ த்திற்கு உத்தரவிட்டுள்ளது.

ஒன்றிய அமைச்சர் மீது வழக்கு: கேரள காவல்துறை அதிரடி

கொச்சி, அக். 31 - சமூக வலைதளங்களில் வன்முறை யைத் தூண்டும் விதத்தில் மத வெறுப்பு ணர்வை பரப்பியதாக ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கொச்சியை அடுத்த களமசேரியில்  நிகழ்ந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தில் இறங்கினார்.  “கேரளத்தில் ஹமாஸின் ஜிகாதிகளுக் கான வெளிப்படையான ஆதரவால், அப்பாவி கிறிஸ்துவ மக்கள் மீது வெடி குண்டு தாக்குதல் நடந்துள்ளது. இவ்வாறு குண்டுவெடிப்பு நடக்கும் வேளையில் முதல்வர் பினராயி விஜயன் தில்லியில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்து கிறார். ஜிகாதிகளுக்கு துணைபோகும் காங்கிரஸ் மற்றும் சிபிஎம்-மின் அரசிய லுக்கு அனைத்து சமூகங்களைச் சேர்ந்த அப்பாவிகளின் உயிர்களைத்தான் விலை யாக கொடுக்க வேண்டியுள்ளது” என்று அர சியல் ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடு பட்டார். இதற்கு முதல்வர் பினராயிவிஜயன் உட்பட கேரளத்தின் அனைத்து தலைவர் களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.   இந்நிலையில் வன்முறையை தூண்டும் நோக்கத்துடன் செயல்படுதல், மதம், இனம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படை யில் வெவ்வேறு குழுக்களிடையே பகை மையை ஊக்குவித்தல், பொது அமை திக்கு பங்கம் விளைவித்தல் போன்ற குற்றங் களுக்காக ஐபிசி 153 (கலவரத்தை ஏற்படு த்தும் நோக்கத்துடன் வெறுப்பைப் பரப்பு தல்) மற்றும் 153ஏ (இரு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் ராஜீவ் சந்திரசேகர் மீது கேரள காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.