சென்னை, செப். 19 - பாசிச பாணி மோடி ஆட்சியின் ரூ.7.5லட்சம் கோடி மெகா ஊழலை அம்ப லப்படுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு, சிறப்புக் கருத்தரங்கை நடத்துகிறது. செப்டம்பர் 23 சனிக் கிழமை மாலை 5 மணி அளவில் சென்னை ஆர்.ஏ. புரம், டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற உள்ள இக்கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளர் என். ராம், கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆகி யோர் கருத்துரை நிகழ்த்து கின்றனர். கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் இக்கருத்தரங்கில் பொரு ளாதார அறிஞர் பேரா.வி.பி.ஆத்ரேயா அறிமுக உரை நிகழ்த்துகிறார். கட்சியின் மாவட்டச் செய லாளர்கள் எல்.சுந்தரராஜன், ஆர்.வேல்முருகன், ஜி.செல்வா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பி.எம்.கேர்ஸ் நிதி ஊழல் துவங்கி, ரபேல் விமான பேர ஊழல் உட்பட, சமீபத்தில் சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்திய மெகா ஊழல்கள் வரை மோடி தலைமையிலான ஊழல் ஆட்சியை இக்கருத்தரங்கம் அம்பலப்படுத்துகிறது.