states

சுங்கக் கட்டண உயர்வை திரும்பப் பெறுக : சிபிஎம்

சென்னை,செப்.01- சுங்க கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களை வதைக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் தெரி வித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கட்டண உயர்வினை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 15 சதவீத கட்டண உயர்வை அம லாக்க ஒன்றிய அரசாங்கம் முடிவு  செய்துள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் 22 சுங்கச் சாவடிகளில் கட்ட ணம் உயர்த்தப்பட்டது. அப்போதே, இந்த கட்டண உயர்வுக்கு கடுமை யான கண்டனங்கள் எழுந்தன. ஆனாலும், மக்கள் மீது கொஞ்சமும் அக்கறையற்ற ஒன்றிய அரசு, கட்டண உயர்வை அனைத்து சுங்கச் சாவடிகளுக்கும் விரிவாக்கியுள்ளது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். வரலாறு காணாத பண வீக்கத்தை நாடு எதிர்கொள்கிறது. மொத்த விலை பணவீக்கம் காரணமாக சிறு  குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டுள் ளன. சில்லரை பணவீக்கம் எளிய  மக்களை பதம்பார்க்கிறது.  ஏற்கனவே,  நாட்டின் பொருளாதார வளர்ச்சி தேக்க நிலையை நோக்கி வேகமாக சரிந்து வருகிறது. 

அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும்

இந்த நிலைமைகளை சீராக்க, அரசு செலவினத்தை அதிகப் படுத்த வேண்டும். மக்களின் வருமா னத்தை உயர்த்த வேண்டும். அதன் மூலம் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கே அபராதம் போடும் வித மாகத்தான் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் உள்ளன. உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., ரயில் டிக்கெட் வாங்கினாலும், ரத்துச் செய்தாலும் கூட ஜி.எஸ்.டி. என்று கட்ட ணக் கொள்ளை அன்றாடம் அதிகரிக் கிறது. ஏற்கனவே, பெட்ரோல், டீசல்,  சமையல் எரிவாயுவின் விலை உயர்வு சாமானிய மக்களை கடுமையாக பாதித்துள்ளது.  தற்போது சுங்க கட்டண உயர்வும் வெகுமக்கள் தலையிலேயே சுமத்தப்படும். குறிப்பாக திருச்சி சமயபுரம்  சுங்கச்சாவடியில் பேருந்துகளுக்கான சுங்கக் கட்டணம் ரூ. 185 வரை  உயர்த்தப்படுகிறது. லாரிக்கான கட்டணம் ரூ.300 வரை உயர்த்தப் படுகிறது. அனைத்து சுங்கச் சாவடிகளி லுமே 15 சதவீத கட்டண உயர்வு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சரக்கு போக்குவரத்து நேரடியாக பாதிக்கப் படும். அத்தியாவசியப் பொருட் களின் விலை மேலும் உயரும். பொதுப் போக்குவரத்தும் சீரழியும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு இருக்கும் என்ற கொள்கை மிக மிக  அபத்தமான ஒன்றாகும். எனவே, ஒன்றிய அரசாங்கம் தற்போதைய கட்டண உயர்வை திரும்பப் பெற்றுக் கொள்வதுடன், ஒவ்வொரு ஆண்டும்  கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கை யை கைவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஒன்றிய அரசை  வலியுறுத்துகிறது.வாகன உரிமை யாளர்கள் இதற்கு எதிராக கண்டன குரல் எழுப்பவும்  கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.