சென்னை, ஜூலை 19- தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ரூ.55 முதல் ரூ.1130 வரை மின்கட்டணம் உயரும் என்று மாநில மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். 100 யூனிட் வரை மின்சாரம் பயன் படுத்துவதற்கு இலவச மின்சாரம் தொடரும் என்று அறிவிக்கப் பட்டிருந்தாலும், இந்த மானியத்தை விட்டுத்தர விரும்புபவர்கள் தாமாக முன்வந்து விட்டுத்தரலாம் என்று கூறியிருப்பது தேவையற்றது.
இது பொதுமக்கள் மத்தியில் மின்சார கட்ட ணத்திற்கான மானியம் தொடருமா என்ற அச்சத்தை ஏற்படுத்தும். தமிழக அரசு அறிவித்துள்ள உயர்வு நடுத்தர குடும்பத்தினருக் கும், வாடகை வீடுகளில் குடியிருப் போருக்கும் கூடுதல் சுமையை ஏற் படுத்தும். ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் அரிசி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட் களின் விலைகளும் உயர்ந்துள்ளன. சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில் மாநில அரசின் மின் கட்டண உயர்வு அறிவிப்பும் மக்களுக்கு கூடுதல் சுமையாக அமையும். மாதம் ஒருமுறை மின் கணக் கெடுப்பு நடைபெறும் என்ற வாக்குறுதியும் செயல்படுத்தப்பட வில்லை. இப்போதும் இரண்டு மாதத் திற்கு ஒருமுறை மின் கணக் கெடுப்பு முறை தொடரும் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உபயோகிக்கும் மின்சார யூனிட் அளவு கூடுதலாகவே வரும். இந்நிலையில், அறிவிக்கப் பட்டுள்ள மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், மாதாமாதம் மின் கணக்கெடுப்பு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.