சென்னை, நவ. 16- கல்வி நிறுவனங்களில் ராக்கிங் மற்றும் அது தொடர்பான புகார்களில் ஈடுபட்ட குற்றவாளி கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ராகிங் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளது. இது தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்த பிரச்சனை தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தர விட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து காவல்துறை மாவட்ட கண்காணிப்பா ளர்களுக்கும், காவல் ஆணையர்களுக்கும், ஐஜிக்கள் மற்றும் சிபிசிஐடி ஏடிஜிபி, உளவுத்துறை ஏடிஜிபி என அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் ராக்கிங் பிரச்சனை நிகழாமல் தடுக்கவும், நட வடிக்கைகளைக் கடுமையாக்கவும் அதிரடி உத்த ரவைப் பிறப்பித்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
ராக்கிங் சம்பவம் தொடர்பாக புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தாரால் எடுக் கப்படும் நடவடிக்கைகள் மீது திருப்தியடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நட வடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிறுவனத்தி னர் தரப்பில் ஏதேனும் அலட்சியம் காரணமாக காவல்துறையிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் வேண்டுமென்றே தாமதம் செய் தால், அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப் படும். ராக்கிங்கில் பாதிக்கப்பட்டவர் அல்லது அவ ரது பெற்றோர், பாதுகாவலர் நேரடியாக காவல் துறையிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய விரும்பினால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிறுவனத்தால் மனநல ஆலோசகர்கள் மூலம் மாணவர்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் மற்றும் முதலா மாண்டு மற்றும் சீனியர் மாணவர்களிடையே இணக்கம் ஏற்படும் கல்வி நிறுவனத்தாரால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ராக்கிங் தடுப்புக் குழு மற்றும் ராக்கிங் எதிர்ப்புப் படை இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் ராக்கிங் தொடர்பான கண்காணிப்பு பிரிவு இருக்க வேண்டும். விடுதி கண்காணிப்பாளர் எல்லா நேரங்களிலும் அணுகக்கூடிய நிலையில் இருக்க வேண்டும் மற்றும் கல்வி நிறுவன பொறுப்பாளர்கள், ஆசிரிய உறுப்பினர்கள், ராக்கிங் எதிர்ப்புக் குழு உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் உட்கோட்ட அதிகாரிகள் மற்றும் மாநில அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும். ராக்ங்கில் ஈடுபடவோ அல்லது அதற்கு துணைபுரிந்து விடவோ கூடாது என்ற உறுதி மொழியை ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக் கத்திலும் ஒவ்வொரு மாணவருக்கு கையேடு, துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டு உறுதிமொழி படிவத்தில் கையொப்பம் பெறவேண்டும். மாண வர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வளா கத்தில் பல இடங்களில் பதாகைகள் விளம்ப ரங்கள் மூலமாக காட்சிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும் அல்லது அதன் அருகா மையில் முழுநேர விடுதிக் கண்காணிப்பாளர் தங்கி இருக்க வேண்டும் என்பதை கல்வி நிறு வனங்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளது.