states

img

கேரள ஜிஎஸ்டி துறையின் மறுசீரமைப்பு: வரி நிர்வாகத்தில் முக்கிய படிக்கல் - கே.என்.பாலகோபால் ,கேரள நிதி அமைச்சர்

கேரள மாநில சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) துறை தீவிரமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. கேரளாவின் வரி நிர்வாகத்தில் இது ஒரு முக்கியமான படியாகும். 2017 முதல் நாட்டில் அமலுக்கு வந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகத்திற்கு ஏற்ப மாநிலத்தில் வரி நிர்வா கத்தை மறுசீரமைக்கும் நீண்ட கால இலக்கு நனவாகி வருகிறது. மறுசீரமைப்பு ஜனவரி 10, 2023 முதல் அமலுக்கு வருகிறது. இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) அரசின் மற்றொரு வாக்குறுதியும் இதன் மூலம் நிறைவேறும்.

நாட்டிலேயே முதல் முறை

நாட்டிலேயே முதல்முறையாக வரி நிர்வாக முறை முழுவதுமாக கேரளத்தில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் சேவைகள், தணிக்கை, புலனாய்வு,  அமலாக்கம் ஆகிய மூன்று பிரிவுகளில் துறையின் செயல்பாடுகள் குவிக்கப் படும். நவீன வரி நிர்வாகத்தில் தணிக்கை என்பது மிக முக்கியமான மதிப்பீட்டு முறை களில் ஒன்றாகும். தற்போது மாநில வரித்துறையின் ஆய்வு முறைகளில் தணிக்கை இடம்பெறவில்லை. தணிக்கை நமது வரி முறையின் ஒரு பகுதியாக மாறுவதால், வரிகளை அறிவியல் ரீதியாகவும் திறமையாகவும் தீர்மானிக்க முடியும். மாநிலத்தில் ஏற்கனவே இருந்த வரி முறைகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட வரித்துறை, புதிய தோற்றத்தையும் உணர்வையும் பெற்றது. ஊழியர்களுக்கு தொழில்முறை பயிற்சி அளிப்பதன் மூலமும், தொழில்நுட்பத்தின் திறனைப் பயன்படுத்துவதன் மூலமும் வரி நிர்வாகத்தை மேம்படுத்துவதை அர சாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மறுசீரமைப்பு என்பது வரிக் கசிவைக் குறைப்பதற்கும், ஏய்ப்பைத் தடுப்பதற்கும், வரி வசூலிப்பதன் அவசியத்தை மக்க ளுக்கு உணர்த்துவதற்கும், பயனுள்ள வரி நிர்வாகத்தை செயல்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான படியாகும்.

ஜிஎஸ்டி சட்டம் 2017

ஜூலை 2017 இல் ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்பட்டதன் மூலம், நாட்டில் புதிய வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சரக்கு மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்பட்ட மறைமுக வரிகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு வரி விதிப்பு அதிகாரம் மாநிலங்களிடமிருந்து பறிக்கப்பட்டது. ஒன்றிய அரசுக்கு பெரும் பான்மை உள்ள ஜிஎஸ்டி கவுன்சிலே சரக்கு மற்றும் சேவை வரி குறித்த முடிவெ டுக்கும் அமைப்பாகும். பெட்ரோலியப் பொருட்கள், மது போன்ற சில பொருட்க ளுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மட்டுமே இப்போது மாநிலங்களுக்கு உள்ளது. 15ஆவது நிதிக்குழு அறிக்கையின்படி, நாட்டின் மொத்த வருவாயில் 62.7 சதவிகிதம் ஒன்றிய அரசுக்கு செல்கிறது. செலவினங்களின் அடிப்படையில், 62.4  சதவிகிதம் மாநிலங்களின் பொறுப்பாகும். இருப்பினும், ஜிஎஸ்டி வருவாயில் பாதி ஒன்றிய அரசுக்குச் செல்கிறது. இது ஒரு சமநிலையற்ற விகிதமாகும். கேரளாவில் இருந்து வசூலிக்கப்படும் வரியில் விகிதாச்சாரப் பங்கும் மறுக்கப்படுகிறது. நாட்டில் சமமான வளப் பகிர்வு இல்லை. இது அரசமைப்பு மதிப்புகள் மற்றும் கூட்டு றவு கூட்டாட்சி முறைக்கு எதிரானது.

ஒன்றிய அரசின் நிதிக்குறைப்பு

வரி ஒதுக்கீடு குறைப்பு, வருவாய் பற்றாக்குறை மானியம் குறைப்பு, ஜிஎஸ்டி இழப்பு நிவாரணம் ரத்து, கடன் வரம்பு குறைப்பு மற்றும் கடன் வாங்குவதில் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், கேரளாவின் வருவாய் இந்த ஆண்டு சுமார் 40,000 கோடி ரூபாய் குறைவாக உள்ளது. இதனால் மாநிலத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோவிட் காரணமாக மாநிலத்திற்கான சொந்த வருவாய் இழப்பில் இருந்து மீண்டு வருகிறோம். உரிய கடன் கூட மறுக்கப்படுகிறது. பட்ஜெட்டுக்கு வெளியே மாநிலத்தால் உருவாக்கப்பட்ட கிப்ஃபி மற்றும் ஓய்வூதிய நிறுவனத்தின் கடனை மாநிலத்தின் பொதுக் கடனாகக் கருத வேண்டும் என்ற ஒன்றிய அரசின் புதிய நிலைப்பாட்டின் ஒரு பகுதியாக, நடப்பு ஆண்டில் 3,500 கோடிக்கு மேல் வருவாய் குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி வருவாய் பற்றாக்குறை மானியத்தில் ரூ.6716 கோடியை ஒன்றிய அரசு குறைத்துள்ளது.

ரூ.13,000 கோடி வருவாய் அதிகரிப்பு

கோவிட் பெருந்தொற்று நெருக்கடியிலிருந்து மாநிலப் பொருளாதாரம் மீண்டு வருகிறது. அரசின் முறையான தலையீடுகளால், கடந்த நிதியாண்டில், கேரளா வின் வருவாய், ரூ.13,000 கோடி அதிகரித்துள்ளது. இந்தச் சிறந்த பணியை  இன்னும் விழிப்புடன் முன்னெடுப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மாநில ஜிஎஸ்டி துறையின் மறுசீரமைப்பு கேரளாவில் மொத்த சரக்கு மற்றும் சேவை பரிவர்த்தனைகளுக்கு இணையான வரி வருவாயை கசிவு இல்லாமல் வசூலிக்க உதவும். சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டு, எல்லைகள் வழியாக வரி ஏய்ப்பு ஏற்படுவதைத் தடுக்க நவீன அமைப்புகளுடன் கூடிய சிசிடிவி கேம ராக்கள் உள்ளிட்ட அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நிதித்துறையின் செயற்பாடுகளை தீவிரப்படுத்துவதன் ஒரு பகுதியாக தீவிர மாற்றங்கள் உத்தியோகப்பூர்வ மட்டத்தில் செய்யப்பட்டுள்ளன. 24 துணை ஆணையர்கள் மற்றும் 380 உதவி மாநில வரி அலுவலர்கள் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. 31 வரி செலுத்துவோர் பிரிவுகள், 94 வரி செலுத்துவோர் பிரிவுகள், 7 தணிக்கை மண்டலங்கள், 41 புலனாய்வு பிரிவுகள் மற்றும் 47 அம லாக்க பிரிவுகள் நடைமுறைக்கு வந்தன.

ஜிஎஸ்டி இழப்பீடு தொடர வேண்டும்

நாடு ஜிஎஸ்டி முறைக்கு மாறியபோது, மாநில அரசுகள் தங்கள் சொந்த வரி வரு வாயில் 52 சதவிகிதத்தை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், ஒன்றிய அரசு 28 சதவிகித இழப்பை மட்டுமே சந்தித்துள்ளது. மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. ஆனால் 2022 ஜூன் 30 க்குள் அதை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது. ஜிஎஸ்டி இழப்பீடு தொடர வேண்டும் என்பதே கேர ளாவின் கோரிக்கை. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில், பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநி லங்கள் உட்பட இழப்பீடு தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளன. கேரளா உள்ளிட்ட மாநிலங்கள், மாநிலங்களுக்கு ஒன்றிய வரி வருவாயில் (வகுக்கக்கூடிய தொகுப்பு-டிவிஸிபிள் பூல்) பங்கு இல்லை என்ற பிரச்சனையை எழுப்பி வருகின்றன. 10ஆவது நிதிக் கமிஷனின் காலத்தில் வகுக்கக் கூடிய தொகையில் கேரளாவின் பங்கு 3.875 சதவிகிதமாக இருந்தது. அது தற்போது 15ஆவது நிதிக் கமிஷனின் கீழ் 1.925 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மாநிலங்கள் எதிர்கொள்ளும் முதல் தலைமுறை பிரச்சனைகளின் அடிப்படையில் ஒன்றிய ஒதுக்கீட்டின் பங்கு தீர்மானிக்கப்படுகிறது. இரண்டாவது தலைமுறை வளர்ச்சிப் பிரச்சனைகளை கேரளா எதிர்கொள்கிறது. இது ஒன்றிய விதிமுறைகளுக்குள் வரவில்லை என்பதும், நாம் அடைந்த மனிதத் திறன் மேம்பாட்டை நமது தகுதி யின்மையாகக் கருதுவதும் மிகவும் ஆட்சேபனைக்குரியது.

பாஜக அரசு இல்லாத மாநிலங்கள் புறக்கணிப்பு

ஒன்றிய அரசு திட்டங்கள் அறிவிக்கும்போது கேரளம் அதிலிருந்து விலக்கப் படுகிறது. நாட்டின் பொது வருவாயைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பெரிய வளர்ச்சித் திட்டங்களின் பயனாளிகளின் பட்டியலில் கேரளா கடைசி இடத்தில் உள்ளது. இந்த புறக்கணிப்பு அரசமைப்பு விழுமியங்களுக்கு எதிரானது. மாநிலங்க ளுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப் பின் அடிப்படையிலான சகவாழ்வு நிர்வாகத்தில் இன்றியமையாதது. எனவே, பொருளாதார கூட்டாட்சி கொள்கைகள் நியாயமாக பின்பற்றப்பட வேண்டும். திட்டக் குழு அமலில் இருந்தபோது, மாநிலங்கள் எப்படிப் பணம் விநியோகிக்கப்படு கின்றது என்பதில் ஓரளவு செல்வாக்குச் செலுத்த முடிந்தது. நிதி ஆயோக் நடை முறைக்கு வந்தவுடன், அதுவும் மறைந்து விட்டது. பாஜக அல்லாத அரசுகள் உள்ள மாநிலங்களை ஒன்றிய அரசு புறக்கணிப்பதை, மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து நாடே கவனம் செலுத்தும் விவாதமாக மாற்ற கேரளா முயற்சிக்கிறது. ஜிஎஸ்டி துறையின் மறுசீரமைப்பு விரிவானது என்று கூறப்பட்டது. வரி என்பது நமக்கும் நாட்டுக்கும் தேவையானது என்ற விழிப்புணர்வை உள்ளடக்கி, ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும் வரிப் பொறுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஜிஎஸ்டியை சரியாகச் செலுத்த மக்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் லக்கி பில் மொபைல் செயலியானது, அரசாங் கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மறுசீரமைப்பு, கேரளாவை நாட்டிலேயே சிறந்த வரி நிர்வாக அமைப்பைக் கொண்ட மாநிலமாக மாற்றுவதையும் நோக்க மாகக் கொண்டுள்ளது. இத்துறையின் கட்டமைப்பு, பணிபுரியும் தன்மை, பணியா ளர்களின் மனப்பான்மை ஆகியவற்றை சீர்திருத்துவதன் மூலம் மாநிலத்தில் நவீன மற்றும் மனிதநேயமிக்க வரி நிர்வாகத்தை அமல்படுத்தும் இலக்கை நன வாக்க முடியும் என்ற நல்ல நம்பிக்கை அரசுக்கு உள்ளது.

தமிழில் : சி.முருகேசன்