சென்னை, ஜூலை 24- காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கும், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்கள் கிரேஸ் பானு, ரிஸ்வான் பாரதி ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழ்நாட்டில் காவல் துறையில் காலி யாக உள்ள 615 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மே 5ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சீருடைப் பணியாளர் தேர்வாணை யம் வெளியிட்ட அறிவிப்பில், மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் பாலினத்தை ஆணாகவோ, பெண்ணாகவோ தேர்வு செய்து கொள்ளலாம் எனவும், பெண்ணாக தேர்வு செய்தவர்களுக்கு மகளிருக்கான 30 விழுக்காடு இட ஒதுக்கீடு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத் தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேபோல், உடற்தகுதித் தேர்வி லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சலுகை வழங்கப்படாததால், தேர்வு அறிவிப்பாணையை ரத்து செய்து, மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சலு கைகளை வழங்கி திருத்த அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும், சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதி கேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மூன்றாம் பாலினத்தவர்க ளுக்கும் வயது வரம்பு சலுகையும், சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் பல உத்தரவு களை பிறப்பித்துள்ளது மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவுகள் அனைத்தும் பரிந்துரை கள் போன்றவை எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்கு செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், சீருடைப் பணியா ளர் தேர்வாணையத்துக்கும் உத்தர விட்டனர்.