சென்னை,ஏப்.1- தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 8,500 செவிலியர்களையும் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.சசிகலா, மாநில பொதுச் செயலாளர் என்.சுபின் ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- கடந்த 2015ஆம் ஆண்டு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் (எம்.ஆர்.பி) போட்டி தேர்வு மூலம் 7,243 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர். அதனை தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு 1788 செவிலியர்களும், 2018 ஆம் ஆண்டில் 800 செவிலியர்களும் 2019 ஆம் ஆண்டில் 1725 செவிலியர்களும் மொத்தம் 11,500 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அதில் தற்போது 8,000 செவிலியர்கள் ஒப்பந்த முறையில் பணி செய்து வருகின்றனர்.
பொதுவாக தமிழ்நாடு மருத்துவத்துறையில் செவிலியர்களை பணியமர்த்தும் போது ஒப்பந்த முறையில் பணியமர்த்தி 2 வருடங் கள் பணி செய்தபின் நிரந்தர செவிலி யர்களாக ஈர்க்கப்படுகின்றனர். தமிழ்நாடு மருத்துவ துறையில் செவி லியர்களுக்கு நேரடி நிரந்தர பணி என்பது இல்லை. தற்போது, எம்.ஆர்.பி மூலம் தேர்வு செய்யப்படட செவிலியர்கள் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஒப்பந்த முறையில் பணி செய்து கொண்டிருக்கின்றனர். பணி நிய மனத்தின் போது இரண்டு வருடங்கள் ஒப்பந்தப் பணி முடிந்ததும் தமிழ்நாடு அரசில் வரும் காலி பணியிடங்களில் ஈர்க்கப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்படும் என்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 3000 செவிலியர்கள் மட்டுமே அதுவும் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பணியமர்த்தப்பட்ட சுமார் 4,800 செவிலியர்கள் 6 முதல் 7 ஆண்டுகள் கடந்தும் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் காலிப்பணி யிடங்கள் இல்லை என்ற காரணத்தால் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. ஒன்றிய அரசின் நிறுவனமான நிதி ஆயோக் 2021ஆம் ஆண்டு அறிக்கை யில் நாட்டிலேயே செயல்திறனில் தமிழ்நாடு மருத்துவமனைகள் முதலிடத்தில் உள்ளது என்றும், அதே நேரத்தில் செவிலியர்களின் எண்ணிக்கையில் இந்திய பொது சுகாதார தரநிலை பரிந்துரையுடன் ஒப்பிடும்போது 0.48 குறியீட்டை (48 விழுக்காடு) மட்டுமே பெற்று தமிழ்நாடு 31 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.
அதே போல் தமிழ்நாட்டில் உள்ள 424 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 செவிலியர் பணியிடங்களில் இரண்டு பணியிடம் மட்டுமே நிரந்தர பணியிடமாகவும் மீதமுள்ள 8 பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகின்றது. மேலும் 1870 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 4 செவிலியர் பணியிடங்கள் உள்ள நிலையில், அதில் ஒரு பணியிடம் கூட நிரந்தர பணியிடமாக இல்லை. அனைத்து பணியிடங்களும் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகின்றன. இந்திய பொது சுகாதார தரநிலை பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு புதிய செவிலியர் பணியிடங்களை உருவாக்குவதுடன் ஆரம்ப சுகா தார நிலையங்களில் நிரந்தர பணியிடங்கள் உருவாக்கினால் ஒப்பந்த முறையில் பணிசெய்யும் செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய முடியும். மேலும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மக்களுக்கு இன்னும் தரமான மருத்துவ சேவையை தமிழ்நாடு அரசால் வழங்க முடியும்.
கடந்த 2006 ஆம் ஆண்டு இது போன்று ஒப்பந்த முறையில் பணி செய்த செவிலியர்கள் அனை வரையும் கலைஞர் ஆட்சிப் பொறுப் பேற்றதும் ஒரே நேரத்தில் அந்தந்த பணியிடத்திலேயே பணி நிரந்தரம் செய்தது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் ன்போது திமுக தேர்தல் அறிக்கையில் ஒப்பந்த செவிலியர் கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதியளிக்கப்பட்டது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.