states

புளி சேமிக்க கிருஷ்ணகிரியில் குளிர்பதன கிடங்கு அமைக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி,பிப்.15- தமிழ்நாட்டில் மிகப்பெரிய புளி சந்தை கூடும் கிருஷ்ணகிரியில் புளியைச் சேமிக்க நவீன குளிர் பதன கிடங்கு அமைக்க வேண்டும் என விவ சாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இம் மாவட்டத்தில் விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது. இங்கு மலை, சிறுகுன்றுகள் அதிகம் உள்ள நிலையில் வறட்சியைத் தாங்கும் புளி சாகுபடியில் விவசாயிகள் அதிக அள வில் ஈடுபடுகின்றனர்.   இந்தியாவின் மிகப்பெரிய புளி சந்தையான ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு அடுத்து மிகப் பெரிய சந்தை யாகக் கிருஷ்ணகிரி பழையபேட்டை புளி சந்தை செயல்படுகிறது. இங்கு வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சந்தை கூடுகிறது. சந்தைக்கு என தனி இடவசதிகள் இல்லாத நிலையில், சந்தை கூடும் நாட்களில் சாலைகளில் மூட்டை மூட்டையாக விற்பனைக்கு புளி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இச்சந்தையின் விலை நிர்ணயத்தை வைத்து தான் ராஞ்சி மற்றும் மத்திய பிரதேசம் ஜபல்பூர் புளி சந்தைகளில் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது.   இந்நிலையில், புளியைச் சேமிக்க நவீன வசதிகளுடன் குளிர்பதன கிடங்கு  அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக புளி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2  லட்சத்துக்கும் அதிகமாக புளிய மரங்கள் உள்ளன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 30 ஆயிரம் டன்னுக்கு மேல் புளி அறுவடை கிடைக் கின்றது. புளியின் விலையைப் பொறுத்த வரை ஏற்ற இறக்கத்திலுள்ள நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரை யான சீசன் காலங்களில் புளியை இருப்பு வைக்க அரசு சார்பில் குளிர் பதன கிடங்குகள் இல்லை. எனவே, கிருஷ்ணகிரியை மைய மாக கொண்டு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மெட்ரிக் டன் வரை புளியை இருப்பு வைக்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய குளிர் பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்று  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.