states

இந்தியாவில் அரங்கேறும் மத ரீதியிலான சம்பவங்கள் கவலை அளிக்கின்றன!

புதுதில்லி, ஜூலை 2 - இந்தியாவில் நடைபெறும் மதரீதியிலான சம்பவங்கள் தங்களுக்கு கவலை அளிப்பதாக சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமைப்பு (International Religious Freedom -IRF)தெரி வித்துள்ளது. ஜூன் 30 அன்று வாஷிங்டனில் நடை பெற்ற மாநாடு ஒன்றில், சர்வதேச மத சுதந்தி ரத்திற்கான (IRF) அமைப்பின் அமெரிக்க தூதர் ரஷாத் ஹூசைன் கலந்து கொண்டு உரையாற்றி யுள்ளார். அதில் அவர் கூறியதாவது: இந்தியாவில், மனிதாபிமானமற்ற செயல்கள் அதிகரித்து வருவது, பல மதச் சமூ கங்கள் தற்போது நடத்தப்படும் விதம், அங்குள்ள ஏராளமான மதக் குழுக்கள் ஆகி யவை குறித்தும் அமெரிக்கா கவலை கொள்கிறது. இனப்படுகொலை அபாயத்தைக் கொண்டி ருக்கும் குடியுரிமைச் சட்டம், ஹிஜாப் தடை, வீடுகள் இடிப்பு, தேவாலயங்கள் மீது தாக்குதல் என மதரீதியான பல்வேறு நடவடிக்கைகள் இந்தியாவில் முன்னுக்கு வந்து கொண்டி ருக்கின்றன. ஒரு அமைச்சர் (அமித்ஷா) முஸ்லிம்களை (வங்கதேசத்தவரை) ‘கரையான்கள்’ என்று குறிப்பிடும் அளவிற்கு, மனிதநேயமற்ற வகை யில் வெளிப்படையாக சொல்லாட்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.

யு.எஸ். ஹோலோகாஸ்ட் அருங்காட்சிய கத்தின் முன்கூட்டிய எச்சரிக்கையில், ‘உலகில் வெகுஜனக் கொலைகள் நடப்பதற்கான ஆபத்தில் இருக்கும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பான பிரச்சனைகள் குறித்து நேரடியாக இந்திய அதிகாரிகளுடன் ஏற்கெ னவே அமெரிக்கா பேசியுள்ளது. ‘உங்களிடம் இந்தப் பிரச்சனைகள் உள்ளன. அதுதொடர் பான சவால்களை கவனித்துச் செயல்படுவது முக்கியம்’ என்று கூறியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே மனித உரிமைகள் மற்றும் மதச் சுதந்திரங்கள் பற்றி பேசுவதை நாங்கள் எங்கள் கடமையாகக் கொண்டிருக்கிறோம். “அனைத்து மக்களின் உரிமைகளுக் காகவும் நாம் ஒன்றிணைந்து போராடுவது முக்கியம். யாரேனும் தாக்கப்பட்டிருந்தால் - நேற்று ஒரு தாக்குதல் (ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடைக்காரர் கன்னையா லால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்) நடந்தது. அது வெறுக்கத்தக்கது. அதையும் நாம் கண்டிக்க வேண்டும். எனது தந்தை 1969-ஆம் ஆண்டு அமெரிக்கா வில் குடியேறினார். இந்த நாடு எங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. எனினும், என் தந்தை இப்போதும் இந்தியாவை நேசிக்கிறார். ஒவ்வொரு நாளும் இந்தியாவில் நடக்கும் விஷ யங்களை கூர்ந்து கவனிக்கிறார். என் பெற் றோரும் நாங்களும் அதைப் பற்றி உரையாடு கிறோம். அத்தகைய இந்தியாவின் மதிப்புகள் காப்பாற்றப்பட வேண்டும். இவ்வாறு ரஷாத் ஹூசைன் பேசியுள்ளார்.