states

நாளை மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் முன்பு வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சென்னை, நவ.30-  இளைஞர்களின் அரசு வேலை வாய்ப்பை சிதைக்கும் அரசாணை 152, 115 -ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்  என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநில தலை வர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் கூட்டாக  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழக அரசு வெளியிட்டுள்ள அர சாணை 115 இன் படி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பரூக்  தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மனித வளக்குழுவின் வரம்புகள் அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு எதிராக இருப்பதாக அரசு ஊழியர் அமைப்புகள் வலியுறுத்தின. இதனை ஏற்று இதன் வரம்புகளை மாற்றி அமைப்பதாக தமி ழக முதல்வர் அறிவித்துள்ளார் .இந்த அர சாணை முழுமையாக திரும்பப் பெறப்  பட்டால்தான்  அவுட் சோர்சிங், காண்ட்ராக்ட்  முறை ஆகிய அபாயங்களில் இருந்து தப்பி, இளைஞர்கள் அரசு வேலையை பெற முடி யும். ஆகவே மேற்கண்ட இந்த அரசாணை யை திரும்பப்பெற்று குழுவை கலைக்க வேண்டும்.  மேலும் மாநகராட்சி நகராட்சிகளில் சி  மற்றும் டி கிரேடு பணியிடங்களில் காண்ட்ராக்ட் முறையை புகுத்தும் அர சாணை 152 ஐ முழுமையாக தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அரசு  பணியிடங்கள் நிரப்பப்படாமல் காண்ட் ராக்ட் முறையில் குறைந்தபட்ச கூலி 21 ஆயிரம் ரூபாய் கூட வழங்கப்படாமல்  அத்தக்கூலிக்கு தொழிலாளர்கள் சுரண் டப்படும் நிலை உள்ளது.

தமிழக அரசு  வெளியிட்டுள்ள 152 அரசாணை இதற்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதாகவும், அரசு  பணியிடங்களை ஒழித்துவிட்டு காண்ட் ராக்ட் சுரண்டல் முறையை புகுத்தும் அநியாயமாகவும் உள்ளது. ஆகவே தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த 152 அரசாணையை முழுமையாக இரத்து செய்திட வேண்டும்.. காண்ட்ராக்ட் முறையில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். உள் ளாட்சி அமைப்புகளில் உள்ள அரசு பணி யிடங்களை நிரப்ப வேண்டும். மேற்கண்ட இந்த இரண்டு அரசாணை களும் முழுமையாக அரசு வேலை என்கிற உரிமையை மட்டுமல்லாது, இடஒதுக்கீட் டில் வேலை பெறும் உரிமையையும் மறுக்  கின்றது. ஆகவே 115, 152 ஆகிய இரண்டு அர சாணைகளையும் இரத்து செய்திட தமி ழக அரசு முன்வர வேண்டும்..அரசின் கவ னத்தை ஈர்க்கும் வகையில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் டிசம்பர் 2 வெள்  ளிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும்  உள்ள மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்  கள் முன்பாக கோரிக்கை விளக்க ஆர்ப்  பாட்டம் நடத்திட உள்ளது. தமிழக அரசு உட னடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.