வாலிபரின் நுரையீரல் அருகே சிக்கியிருந்த கத்தி அகற்றம்
சென்னை,அக்.16- திருவள்ளூர் மாவட்டம், வேப்பூரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (23). பட்டதாரியான இவர், தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். பணி முடிந்து அதிகாலை 2 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் தமிழ்செல்வனை வழிமறித்து ‘லிப்ட்’ கேட்டு ஏறி யுள்ளார். சிறிது தூரம் கழித்து அந்த நபர் வண்டியை நிறுத்துமாறு கூறியுள்ளார். தமிழ்செல்வனும் உடனே வண்டியை நிறுத்தியுள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர், அருகில் இருந்த கூட்டாளிகளுக்கு சைகை கொடுக்கவே 2 பேர் ஓடி வந்தனர். 3 பேரும் தமிழ்செல்வனை அடித்து உதைத்து அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துள்ளனர். அப்போது வழிப்பறியில் ஈடுபட்ட ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை தமிழ்செல்வனின் முதுகில் குத்தினான். இதில், மயங்கிய நிலை யில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கீழே விழுந்தார். கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். கொள்ளையன் குத்திய கத்தி தமிழ் செல்வனின் கல்லீரல் மற்றும் நுரை யீரல் இடையே சிக்கிக்கொண்டது. அந்த வழியாக சென்றவர்கள், தமிழ்செல்வனை மீட்டு திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் கத்தியை வெளியே எடுக்க முடியாததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜீவ் காந்தி அரசு மருத்து வமனையில் உடனடியாக அனு மதித்து வாலிபரின் கல்லீரல் மற்றும் நுரையீரல் இடையே சிக்கிய கத்தியை அறுவை சிகிச்சை செய்து அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்த னர். பின்னர், மருத்துவர்கள் குழு கத்தியை வெற்றிகரமாக அகற்றி னர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் தமிழ்செல்வன் நல்ல உடல் நலத்து டன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தங்கம் விலை குறைந்தது
சென்னை,அக்.16- சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது. ஆபரண தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவது மாக இருந்து வருகிறது. அதன்படி, சென்னையில் திங்களன்று (ஆக்.16) ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,240-க்கும், ஒரு கிராம் ரூ.5,530-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை சற்று அதிகரித் துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.77.50-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.77,500-க்கும் விற்பனை செய்யப் படுகிறது.
ஓலா, உபேர் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்
சென்னை,அக்.16- ஓலா, உபேர் ஆப் மூலம் கார், ஆட்டோக் கள் புக் செய்து பயணம் செய்வோர் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. பேருந்து ரயில் நிலையங்கள், விமான நிலையம் செல்வோர் செயலி பயன்படுத்தி குறித்த நேரத்திற்கு கார், ஆட்டோ தேவை என்று புக் செய்து விட்டால் அவர்கள் இருக்கும் இடத்திற்கே வாகனங்கள் வந்து விடுவதால் பொதுமக்கள் எளிதாக பய ணத்தை மேற்கொள்ள முடிகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்க ளில் இந்த செயலியை பயன்படுத்தி மருத்து வமனை உள்ளிட்ட அவசர பயணத்திற்கு புக்கிங் செய்து குறித்த நேரத்திற்கு செல்ல முடிகிறது. இந்த நிலையில் ஓலா, உபேர் ஓட்டுநர்கள் அக்.16 முதல் 3 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, கார்களை ஓட்டாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சென்னையில் ஆட்டோ, கால் டாக்சி, போர்ட்டர் சரக்கு வாகனங்கள் என 70 ஆயிரம் ஓடுகின்றன. தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர் கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பொது மக்கள் திங்களன்று சிரமப்பட்டனர்.ஆப் மூலம் முன்பதிவு செய்யப்படும் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை.சென்னையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து சிஐடியு மாநிலச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் வி.குப்புசாமி உரையாற்றினர்.
தொடங்கியது வணிகர்களுக்கான சமாதான திட்டம்
சென்னை,அக்.16- தமிழ்நாட்டில் மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் 2006-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனுடன் பல்வேறு விற்பனை வரி சார்ந்த மேலும் 10 சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்த நிலையில் வணிகர்களிடம் இருந்து வரி நிலுவையை எளிதாக வசூலிக்கும் வகையில் 1999-ல் சமாதான திட்டம் அறிமு கப்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து 2002, 2006, 2008, 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சி யாக செயல்படுத்தப்பட்டு வணிகர்களின் நீண்டகால வரி நிலுவைகள் கணிசமாக குறைக்கப்பட்டன. இந்த நிலையில் வணிகர்களின் நீண்ட கால வரி நிலுவைகளை எளிய முறையில் வசூலிக்கும் பொருட்டு சமாதானத் திட்டத்தை தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்கான அறிவிப்பை கடந்த 10 ஆம் தேதி சட்டப்பேரவையில் வெளியிட்டார். இந்த திட்டத்தால் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கான வரி நிலுவைகளை வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதற்காக ரூ.50 ஆயிரத்துக் கும் குறைவாக நிலுவை வைத்துள்ள வணிகர்களின் நிலுவைத் தொகை வரி, வட்டி அனைத்தும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அக்.16 முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் 1 லட்சம் எளிய வணிகர்கள் பயன்பெறுவதுடன் ரூ.147 கோடி நிலுவை தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.மீதம் உள்ள வணிகர்கள் அரசின் சலுகை விவரங்களை அறிந்து அதற்கேற்ப நிலுவைத் தொகையை செலுத்தலாம். இதையொட்டி வணிகர்களுக்கான சமாதான திட்டத்தை தலைமை செய லகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று (அக்.16) முறைப்படி தொடங்கி வைத்து ரூ.50 ஆயிரத்துக்கும் கீழ் நிலுவை தொகை வைத்துள்ள வணிகர்களில் 10 பேருக்கு தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கினார். சமாதானத் திட்டம் 4 மாதங்கள் நடைமுறையில் இருக்கும். அதன்படி அடுத்த ஆண்டு பிப்.15 வரை வணிகர்கள் நிலுவைத் தொகையை சரிபார்த்து அதை விரைந்து செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.