states

தீக்கதிர் விரைவு செய்திகள்

அதிமுக அலுவலகத்தில் சீல் அகற்றம்

சென்னை, ஜூலை 21- அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் வருவாய்த்துறையினர் ஒப்படைத்தனர். கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரி திருமண  மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக வின் இடைக்காலப் பொதுச் செயலா ளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு  செய்யப்பட்டார். அந்த பொதுக் குழுவை புறக்கணித்த ஓ.பன்னீர் செல்வம் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்த ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.  இருதரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.  இதில் அதிமுகவை சேர்ந்த சிலருக்கு  காயம் ஏற்பட்டது.இந்த கலவரத்தை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவல கத்திற்கு அன்று மாலையே தென் சென்னை வருவாய் கோட்டசியர் சாய்  வர்தினி தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகளால் சீல் வைக்கப் பட்டது.

கறுப்பர் கூட்டம் யூடியூப் ஸ்டுடியோ சீலை அகற்ற அனுமதி

சென்னை,ஜூலை 21- கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட கந்த சஷ்டி கவசம்  தொடர்பான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை  காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வீடியோ தயார் செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட ஸ்டுடியோவை கடந்த 2020 ஜூலை மாதம் பூட்டி சீல் வைத்தனர். இந்த வழக்கு விசாரணை முடி வடைந்து விட்டதாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பூட்டி கிடப்பதாலும் , அங்கே இருக்கும் பொருட்களை பாதுக்காக்க வேண்டியும் மனுதாரர் கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர் இது போன்ற செயலில் ஈடுபட மாட்டேன் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து மனுதார் சார்பில் தனது ஸ்டுடியோவில் சர்ச்சைக்குரிய எந்த வீடியோவும் தயாரிக்க அனுமதிக்க மாட்டேன் என்று பிரமான பத்திரத்தை நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார். மனுதாரரின் உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கறுப்பர் கூட்டம் வழக்கில் பூட்டி சீலிடப்பட்ட ஸ்டுடி யோவை திறக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டார்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது

தருமபுரி,ஜூலை 21- கர்நாடக மாநில நீர்பிடிப்பு பகுதி களில் கனமழை பெய்து வந்தது. இதனால் கபினி, கிருஷ்ண ராஜ சாகர்  அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித் தது. இந்த 2 அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர்  47 ஆயிரத்து 936  கனஅடிநீர் தமிழக காவிரி ஆற்றில்  திறந்து விடப்பட்டுள்ளது. ஒகேனக்கல் லுக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி  தண்ணீர் வந்தது. இந்தநிலையில் கர்நாடக அணை களில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் வினாடிக்கு 64 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஜவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவி யில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் 12-வது நாளாக தடை விதித்துள்ளது.

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை,ஜூலை 21- சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு,  கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

காட்டு விலங்கு பாதுகாப்பில் இந்திய - நமீபிய ஒத்துழைப்பு

புதுதில்லி, ஜூலை 21- காட்டு விலங்கு மற்றும் தொடரவல்ல பல்லுயிர் பாதுகாப்பு பற்றி இந்தியாவும் நமீபியாவும் புதனன்று ஒரு முக்கிய ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளன. இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சுற்றுச் சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், இந்தியாவில் பயணம் மேற்கொண்ட நமீபிய துணை அமைச்சரும் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சருமான நெட்டம்போ நந்தி-டைட்வா ஆகிய இருவரும் இதில் கையொப்பமிட்டனர். இவ்வொப்பந்தத்தின்படி, நமீபியாவிலிருந்து சில சிறுத்தைப்புலிகள் இந்தியாவின் வனப் பிரதேசங்களுக்கு அனுப்பப்படும். சுதந்திரம் பெற்ற பின், சிறுத்தைப்புலி இந்தி யாவில் அழிந்து போய்விட்ட ஒரேயொரு பெரிய ஊனுண்ணி  வகையாகும். 75ஆவது சுதந்திர தின நிறைவைக் கொண்டா டும் இவ்வாண்டில் அவற்றை மீண்டும் இந்தியாவில் உட்புகுத்துவது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தோல்வியடைந்த அமெரிக்க  அரசு அமைப்பு முறை கருத்துக் கணிப்பு தகவல்

நியூயார்க், ஜூலை 21- 2022ஆம் ஆண்டின் ஜூலை திங்கள் சியானா கல்லூரியுடன் இணைந்து தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நடத்திய பொது கருத்துக் கணிப்பில், அமெரிக்காவின் அரசு அமைப்பு முறை தோல்வியடைந்து விட்டது என்று பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் அரசியல் அமைப்பு முறை, மிகவும் பிளவுபட்டு, நாட்டின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது என்று 53 விழுக்காடு மக்கள் கூறுவதாக தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி கட்டுப்பாடு, கருக்கலைப்பு உரிமைகள் ஆகியவற்றின் மீது அமெரிக்க உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புகள், அமெரிக்கப் பொதுமக்களின் கருத்தைப் புண்படுத்தி யுள்ளன என்று ஜார்ஜிய மாநிலத்தின் லில்பர்ன் நகரி லுள்ள 40 வயதான நிர்வாக உதவியாளர் எலிசபெத் தீல்  கூறினார்.