சென்னை, ஆக.12- “நீண்ட கால முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமுமுக கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் அவர் கூறுகை யில், தமிழ்நாடு அமைச்ச ரவை கூடி நீண்ட கால முஸ் லிம் சிறைவாசிகள் விடு தலை செய்வதற்கு வழி வகுக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கோவை மத்திய சிறைச்சாலையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் இறுதியில் ஒரு மாதத்திற் குள் நீண்ட கால இஸ்லா மிய சிறைவாசிகள் 36 பேரை விடுதலை செய்வ தற்கு தீர்மானம் நிறை வேற்றப்படவில்லை யெனில் தலைமைச் செயல கம் நோக்கி அடுத்த போராட் டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். ஒரு மாதம் கடந்த பிறகும், முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு அரசு அதிகாரப் பூர்வமாக எந்த அறிவிப் பையும் வெளியிடவில்லை. இந்தச் சூழலில் நீதியர சர் ஆதிநாதன் பரிந்துரை யின் அடிப்படையில் பேரறி ஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று தமுமுக கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தக் கோரிக்கை நிறை வேற்றப்பட வில்லையெ னில் வருகிற செப்டம்பர் 30 அன்று தலைமைச் செயல கத்தை முற்றுகையிடுவோம் என்றும் அவர் எச்சரித் துள்ளார்.