states

நெல் கொள்முதல் முறையில் தளர்வு வழங்க வேண்டும்

சென்னை, பிப். 5- டெல்டா பகுதிகளில் அறு வடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழை யின் காரணமாக நீரில் மூழ்கி வீணா னது. இந்த பாதிப்புகளை தணித்தி டும் வகையில் நெல் கொள்முதல் விதி முறையில் தளர்வு வழங்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிர தமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் பிரத மருக்கு  எழுதியுள்ள கடிதத்தில், காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்களை துரித மாகத் தூர்வாருதல், மேட்டூர் அணை யில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடுதல், விவசாயி களுக்கு குறுவைத் தொகுப்பு வழங்குதல் போன்று தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கை களால் நெல் சாகுபடிப் பரப்பு  அதிகரித்து, குறுவைப் பருவத்தில் 4.19 லட்சம் ஹெக்டேர் பரப்பள வில் சாகுபடி செய்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.  மாநிலத்தில் 16.43 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு, சம்பா, நவரை பயிரின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அதில் சுட்டிக் காட்டியுள்ளார்.

 பிப்ரவரி மாதத்தில் நெல் அறு வடை செய்யத் தயாராக இருந்த நேரத்தில், துரதிஷ்டவசமாக தஞ்சா வூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயி லாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய மழையால், சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.  வயல்களில் தேங்கியுள்ள தண் ணீரை வெளியேற்றி,அறுவடைப் பணியை மீண்டும் தொடங்கிடத் தேவையான அனைத்து முயற்சி களையும் எடுத்து வரும் நிலை யில், தொடர்ந்து பலத்த மழை பெய்வதால் அறுவடை செய்யப் பட்ட தானியத்தில் ஈரப்பத அளவு மிக அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள் ளதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி யுள்ளார். கடந்த காலங்களில், குறுவை பரு வத்தில், பரவலாக்கப்பட்ட கொள் முதல் திட்டத்தின்கீழ், மாநில கொள் முதல் முகமையான, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில், நெல் கொள்முதலில் ஈரப்பதம் குறித்த விதிமுறைகளைத் தளர்த்த ஒன்றிய அரசு அனுமதி அளித்த தைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச் சர் ,

பருவம் தவறிய இந்த மழையின் தற்போதைய சூழ்நிலையில், கொள்முதல் ஈரப்பதத்தில் அதே போன்ற தளர்வு தேவைப்படுகிறது என்றும், அதன்மூலம் நெல் கொள் முதல் பணிகளைச் சீராக செய்து முடிக்க இயலும் என்று தெரிவித் துள்ளார். எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 22விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சி யடையாத, சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 விழுக்காட் டில் இருந்து  5 விழுக்காடு வரை தளர்த்தவும், சேதமடைந்த, நிற மாற்றம் மற்றும் முளைத்த நெல்லை  5 விழுக்காட்டிலிருந்து 7 விழுங்காடு வரை  தளர்த்தவும், தேவையான மதிப்பை இந்த சம்பா பயிருக்கு குறைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு முதலமைச்சர் அந்த கடிதத்தில் பிரதமரை வலியுறுத்தி யுள்ளார்.