சென்னை,ஜூன்7- விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர் பாக கைது செய்யப்பட்ட 5 காவலர்களுக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை பட்டினப் பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ், கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக தலைமைச் செயலக காலனி காவலர்கள் கைது செய்தனர். அன்று இரவே விக்னேஷ் விசாரணையின் போது உயிரிழந்தார். இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் விசார ணைக் கைதி விக்னேஷ் மரண வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப் பட்டு விசாரணை நடத்தப் படும் என்று அறிவித்தார். இதுதொடர்பாக, சிபிசிஐடி போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், விக்னே ஷை காவல் நிலையத்தில் போலீஸார், கொடூரமாக தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தலை மைச் செயலக காலனி காவல் நிலைய, காவலர் பவுன்ராஜ், தலைமை காவலர் முனாஃப், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக், ஆயுதப்படை காவலர் ஜெக ஜீவன், ஆயுதப்படை காவ லர் சந்திரகுமார் ஆகி யோரை கைது செய்த சிபிசி ஐடி போலீசார் சிறையில் அடைத்தனர்.