பாஜக நிர்வாகி ஆக்கிரமித்த ரூ.50 கோடி நிலம் மீட்பு
கடலூர் மாவட்டம் பண் ருட்டி நகராட்சி பேருந்து நிலையத்தின் பின் புறம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலம் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ரூ.50 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை பண்ருட்டி பாஜக நகர செய லாளர் ராமச்சந்திரன் என்பவர் தனது உறவினர் பெயரில் ஆக்கிரமித்தது மட்டுமல்லா மல், கடைகளை கட்டி பல ஆண்டுகளாக வாடகைக் கும், லாரி, வாகனங்கள் நிறுத்துவதற்கும் வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில், அறநிலை யத் துறை இடத்தை காலி செய்யும்படி அதிகாரிகள் பல முறை நோட்டீஸ் அனுப்பி னர். ஆனால் இடத்தை காலி செய்யாமல் சம்பந்தப்பட்ட வர்கள் வியாபார நடவடிக்கை யில் ஈடுபட்டு வந்தனர். இது பற்றி சென்னை உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிபதி உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு இடத்தை கைப்பற்ற அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், செவ்வாயன்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் ஆகி யோர் அடங்கிய குழு ஆக்கிர மிப்பு இடத்தில் உள்ள நுழைவு கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றது. அப்போது பாஜக நகர செயலாளர் ராமச்சந்தி ரன், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்த னர். தற்காலிக ஷெட் போட்டி ருந்த கடைகளை பொக் லைன் இயந்திரம் மூலமாக அகற்றினர். மேலும் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த பாஜக செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்யவும் அதிகாரிகள் காவல்துறையினருடன் ஆலோசனை நடத்தி வரு கின்றனர்.
செங்கல் சூளை புகை: தம்பதியர் உயிரிழப்பு
வேலூர் கணியம்பாடியை அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (42). இவர் அதே பகுதியில் பழனிவேல் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையை கடந்த 15 ஆண்டுகளாகக் குத் தகை எடுத்து, அவரது மனைவி அம்முலு (33) உடன் செங்கல் சூளையை கவனித்து வருகிறார். திங்களன்று சூளையை கொளுத்திவிட்டு அருகிலேயே தெய்வ சிகாமணி, அம்முலு ஆகியோர் உறங்கி யுள்ளனர். செங்கல் சூளையில் இருந்து வெளிவந்த புகையின் காரணமாக இரு வருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர். செவ்வாயன்று அதிகாலை அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற னர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தம்பதி உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
சிக்கன் சப்ளை செய்தவர் கைது
நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள சந்தப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவை சேர்ந்த வர் தவக்குமார். இவரின் மனைவி மற்றும் மகள் கலையரசி (14), மைத்துனர் ஆகிய நான்கு பேர் பரமத்தி சாலையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் சவர்மா சாப் பிட்டனர். சாப்பிட்ட அனைவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், தனி யார் மருத்துவமனையில் சிறுமி கலை யரசி (14) பலியானார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைக்கப் பட்டு 3 பேர் கைது செய்யப்பட்ட நிலை யில், சிக்கன் சப்ளை செய்த கறிக்கோழி கடை உரிமையாளர் சீனிவாசனை போலீ சார் கைது செய்துள்ளனர்.
‘நீட்’ தேர்வு தேதி அறிவிப்பு
சென்னை, செப். 19- இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பு களில் சேருவதற்கு தகுதித் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி களில் சேர்ந்து படித்து வருகின்றனர். கடந்த 2 வருடமாக நீட் தேர்வு தாமத மாக நடைபெற்று வந்த நிலையில், இந்த வருடம் மே மாதம் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டிற் கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே மாதம் 5 ஆம் தேதி நடத்தப் படும் என்று தேசிய தேர்வு முகமை செப்.19 அன்று அறிவித்துள்ளது. அதே போல உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர்வதற்கு ஜேஇஇ முதல் தேர்வு அட்டவணை வெளியிடப் பட்டது. ஜேஇஇ முதல் தேர்வு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி வரை நடைபெறு கிறது. ஜேஇஇ 2 ஆம் தேர்வு ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை
சென்னை, செப்.19- திரைப்பட இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா (15) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மீரா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படு கிறது. சம்பவத்தன்று அவரது தந்தை யின் படுக்கை அறையில் அதிகாலை 3 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் தொங்கிக் கொண்டிருப் பதை பார்த்து வீட்டின் பணியாளர் உதவியுடன் கீழே இறக்கி காரின் மூலம் தனியார் (காவேரி) மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
விஷால் மீண்டும் ஆஜராக உத்தரவு
சென்னை, செப். 19- லைகா நிறுவன வழக்கில் நடிகர் விஷால் செப்.22 இல் மீண்டும் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.21 கோடியே 29 லட்சம் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. இந்த விவகாரத்தில் கடனை செலுத்தா மல் ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிட தடை கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ரூ. 15 கோடியை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் வங்கி ஒன்றில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும்‘ என விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. தற்போது வரை ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருப்பதாகவும், விஷாலின் மார்க் ஆண்டனி படம் வரும் 15 ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் லைகா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்து உத்தர விட்டது. மேலும், செப்.12 ஆம் தேதி விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரி வித்தது. நடிகர் விஷால் ஆஜரானதைத் தொடர்ந்து, மார்க் ஆண்டனி படத்திற்கு தடையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்த நிலையில், செப்.19 அன்று இந்த வழக்கு விசா ரணை நடைபெற்றது. அதில், நடிகர் விஷால் செப்.22 இல் மீண்டும் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தொடங்கியது காலாண்டுத் தேர்வு
சென்னை, செப். 19- தமிழ்நாடு அரசு பாடத் திட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்.19 அன்று தொடங்கியது. முன்னதாக கடந்த 15 ஆம் தேதி 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படு கிறது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான ஒரே வினாத்தாள் முறை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கல்வி அலுவல கங்கள் மூலம் தயாரிக்க பட்டு வந்த வினாத்தாள் முறையில் மாணவர்களை மதிப்பீடு செய்வதில் வேறுபாடு ஏற்படு கிறது. ஆனால் அனைத்து பள்ளி மாண வர்களும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் பின்பற்றி தேர்வு எழுதினால் ஏற்றத்தாழ்வு ஏற்படாது என்று கருதி மீண்டும் பொதுவான வினாத்தாள் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.
சிறுமி பலி: உணவகங்களில் ஆய்வு செய்ய உத்தரவு
சென்னை, செப்.19- தமிழ்நாட்டிலுள்ள அனைத்து உணவகங்களையும் ஆய்வு செய்ய சுகா தாரத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் ஷவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்ட 14 வயது சிறுமி வாந்தி, பேதி ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும், 13 கல்லூரி மாணவிகள் மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தனியார் உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டு, கடையின் உரிமையாளர் கைது செய்யப் பட்டார். தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் முழுவதும் உணவகங்களில் ஷவர்மா விற்பனை செய்ய தற்காலிக தடை விதித்து மாவட்ட நிர்வாகம் திங்கட்கிழமை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களிலும் ஆய்வு செய்ய மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தர விட்டுள்ளார்.